ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்தின் எடிட்டராக பணியாற்றியவர் தான் மகேஷ் நாராயணன் என்பவர்.. இவர் ஒருபடி முன்னேறி தற்போது மலையாள திரையுலகில் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார். போர்க்காலத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிந்த மலையாள நர்ஸ்கள் எதிர்கொண்ட இன்னல்களையும் நெருக்கடி நிலையையும் பிரதானப்படுத்தி இவரது படம் தயாராகிறது. இந்தப்படத்தில் கதாநாயகனாக குஞ்சாக்கோ போபன் நடிக்கிறார். கூடவே இன்னொரு ஹீரோவாக பஹத் பாசில் நடிக்கிறார்.. இவர்களுடன் நர்ஸ் வேடத்தில் பார்வதி நடிக்கிறார் என்பது வரை ஏற்கனவே உறுதியாகி விட்டது..
பாலிவுட் நடிகரான பிரகாஷ் பெலவாடியும் முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். சமீபத்தில் ஐதராபாத் பகுதியில் முதற்கட்ட படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ள மகேஷ் நாராயணன், அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக அரபு நாடுகளுக்கு பறக்கவுள்ளார். இந்தப்படத்தில் குஞ்சாக்கோ போபனும் பார்வதியும் வெளிநாட்டில் வேலைபார்க்கும் நர்ஸ்களாகவும், பஹத்பாசில் இந்திய தூதரகத்தில் பணிபுரிபவராகவும் நடிக்கிறார்கள்.. அது சரி.. அப்படியானால் பார்வதி யாருக்கு ஜோடி என்றுதானே கேட்கிறீர்கள்.. இவர்கள் இருவருக்குமே பார்வதி ஜோடி அல்ல, மனைவியை அரபுநாட்டுக்கு வேலைக்கு அனுப்பிவைத்துவிட்டு அவர் வருகையை நோக்கி கேரளாவில் தவிப்புடன் காத்திருக்கும் கணவன் வேடத்தில் பார்வதிக்கு ஜோடியாக நடிக்கிறார் கெஸ்ட் ரோலுக்கு பெயர்போன இளம் நடிகர் ஆசிப் அலி.