ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஆண்மை தவறேல் படத்தை இயக்கியவர் குழந்தை வேலப்பன். அதையடுத்து இப்போது கிருஷ்ணா-சுவாதி நடிப்பில் யாக்கை என்ற படத்தை இயக்கியிருக்கிறார். பிரகாஷ்ராஜ், சிங்கம் புலி, குருசோமசுந்தரம் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் மருத்துவ உலகில் நடக்கும் ஒரு பிரச்சினையை மையமாகக்கொண்ட கதையில் உருவாகியிருக்கிறது. கழுகுக்கு பிறகு கிருஷ்ணா அதிகமாக இந்த படத்தைதான் எதிர்பார்க்கிறாராம். தனது நண்பர்களிடத்திலும் இந்த படம் குறித்து பெருமையாக பேசி வருகிறார் அவர்.
மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு ஒருநாள் சென்னையில் உள்ள ஒரு பில் டிங்கில் நடந்து வந்திருக்கிறது. அப்போது சற்று உயரத்தில் கேமராவை செட் பண்ணிக்கொண்டிருந்தபோது, எந்தமாதிரி ஷாட் வைக்க வேண்டும் என்று ஒளிப்பதிவாளரிடம் விவாதித்துக்கொண்டிருந்தாராம் டைரக்டர் குழந்தை வேலப்பன். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் கால்தவறி கீழே விழுந்து விட்டாராம். ஆனால் அந்த சமயத்தில் அதற்கு கீழே நின்று கொண்டிருந்த கிருஷ்ணா-சுவாதி இருவரும் அதை கவனித்து விட, மின்னல் வேகத்தில் பாய்ந்து சென்று அவரை கீழே விழாமல் தாங்கிப்பிடித்துக் கொண்டார்களாம். அதனால்தான் விபத்து ஏற்படாமல் தப்பினாராம் குழந்தை வேலப்பன். இதை யாக்கை படத்தின் ஆடியோ விழாவில் கூறிய குழந்தை வேலப்பன், அவர்கள் இருவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.