இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் வளர்ந்து வந்தபோதெல்லாம் அவ்வப்போது ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் போட்டோ எடுத்துக்கொள்வது வழக்கமாக இருந்து வந்தது. அது விஜய், அஜித்தின் ஆரம்ப காலத்திலும் இருந்தது. ஆனால், இப்போது அந்த நிலை மாறி விட்டது. ரசிகர்களை சந்திக்க யாருமே நேரம் ஒதுக்குவதில்லை. தங்கள் சம்பந்தப்பட்ட விசயங்களை டுவிட்டரில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். சிலர், டுவிட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்கள். ஆக, இணையதளம்தான் நடிகர்களுக்கும், ரசிகர்களுக்குமான நட்பு பாலமாக இருக்கிறது.
அதேசமயம் சில நடிகர்கள் படப்பிடிப்புக்கு அவுட்டோர் செல்லும்போது தங்களை காண ஆவலுடன் வரும் ரசிகர்களை சந்திக்க நேரம் ஒதுக்குகிறார்கள். இதில் சூர்யா முதலிடம் பிடிக்கிறார். சிங்கம்-3 படத்தின் படப்பிடிப்பு, ஆந்திரா, தமிழ்நாடு, மலேசியா என பல லொகேசன்களில் நடைபெற்றபோது தன்னை சந்திக்க வந்த ரசிகர் ரசிகைகளிடம் அவ்வப்போது சந்தித்து போட்டோ எடுத்துக்கொண்டு அவர்களை சந்தோசப்படுத்தினாராம். சில நாட்களில் படப்பிடிப்பு இல்லாதபோது ரசிகர்களிடம் அன்போடு உரையாடியும் மகிழ்ந்திருக்கிறார் சூர்யா.