ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாகிஸ்தான் நடிகர்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டதிலிருந்து பாலிவுட்டில் ஒரு அதிருப்தி கலந்த மனநிலை நிலவி வருகிறது. சல்மான், ப்ரியங்கா சோப்ரா, இயக்குநர் அனுராக் காஷ்யாப் போன்ற சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பல பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதனிடையே இயக்குநர் அனுராக் காஷ்யாப் இந்த விஷயத்தில் பிரதமர் மோடியையும் உள் இழுத்துள்ளார். அதில், பிரதமர் மோடி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு சென்றபோதுதான் கரண் ஜோகர் தனது படத்தை பாகிஸ்தானில் எடுத்தார். இப்போது படத்தை தடை செய்கிறவர்களால் பிரதமரின் பயணத்தை தடை செய்ய முடியுமா? என்று கூறியிருந்தார். இதற்கு இயக்குநர் மதுர் பண்டர்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மதுர் தன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது... ‛‛அனுராக்கின் கூற்று முற்றிலும் தவறானது. அவர் இதுபோன்ற கருத்தை தெரிவித்து இருக்க கூடாது. முதலில் இத்தகைய ஒரு முடிவை பா.ஜ., அரசோ, அல்லது வேறு எந்த ஒரு அரசோ எடுக்கவில்லை, இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கமும் தான் இத்தகைய முடிவை எடுத்திருக்கிறார்கள். அனுராக் கேள்வி கேட்க வேண்டும் என்றால் அவர்களை போய் கேட்கட்டும், இந்த விஷயத்தில் மோடியை தேவையில்லாமல் உள் இழுக்க கூடாது. பாகிஸ்தான் நடிகர்கள் மீது தனிப்பட்ட வேறுப்பு எதுவும் கிடையாது. தற்போதைய சூழலில் பாகிஸ்தான் கலைஞர்கள் இங்கு பணியாற்றுவது நல்லதல்ல. அதேசமயம், ‛ஏய் தில் ஹே முஷ்கில்' படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ளது, அந்தப்படத்தை திரையிட அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு மதுர் கூறியுள்ளார்.