இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
பாஜிராவ் மஸ்தானி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மீண்டும் ஒரு சரித்திர படத்தை கையில் எடுத்திருக்கிறார் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி. ‛பத்மாவதி என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், பன்சாலியின் ஆஸ்தான நடிகர்களாகிவிட்ட ரன்வீர் சிங், தீபிகா படுகோனே நடிக்கின்றனர், கூடவே ஷாகித் கபூரும் இணைந்துள்ளார். இதில் ராணி பத்மாவதியாக தீபிகா நடிக்கவுள்ளார்.
இதன்படப்பிடிப்பு அடுத்தவாரம் முதல் ஆரம்பிக்க உள்ள நிலையில் முதற்கட்டமாக தீபிகா படப்பிடிப்பில் அடுத்தவாரம் முதல் பங்கேற்கிறார். ஏற்கனவே அவருக்கான போட்டோ ஷூட் எல்லாம் முடிந்துவிட்ட நிலையில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. மேலும் ரன்வீர் சிங், ஷாகித் ஆகியோரும் பத்மாவதி படத்திற்காக நீண்ட தலைமுடி வளர்த்து வருகிறார்கள். விரைவில் அவர்களும் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார்கள்.
பத்மாவதி சுமார் ரூ.170 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாய் தயாரிக்கப்பட இருக்கிறது. இதை பன்சாலி புரொடக்ஷ்ன்ஸ் மற்றும் வயாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறார்கள்.