Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மஞ்ச முகத்தழகி... மனைவிக்காக பாட்டெழுதி

17 அக், 2016 - 11:12 IST
எழுத்தின் அளவு:
Dharmadurai-famous-singer-Madhicchiyam-Bala-interview

வெள்ளைச் சிரிப்பும்,வெண்கல குரலுமாக, 'மக்க கலங்குதப்பா... மடி பிடிச்சு இழுக்குதப்பா...' என, சமீபத்தில் வெளிவந்த 'தர்மதுரை' படத்தில் பாட்டெழுதி பாடியும், நடித்தும் அசத்தியவர் நம் மதுரைக்காரர், மதிச்சியம் பாலா.

அப்பா பெத்து என்ற கோபால், கிளாரினெட் இசைக்கலைஞர். தந்தை வழியில் பயணிக்க விரும்பிய போது, அப்பாவின்அன்புக் கட்டளையால் பி.ஏ., வரை முடித்தார், பாலா. கல்லுாரி படிப்பின் போதே, உடன் பயின்ற மாணவி ஜானகியை கண்டார்.


கண்டதும் காதல்.... ஜானகிக்காக கவிஞராக, பாடகராக தன்னை மாற்றிக்கொண்டார்.


மஞ்ச புடவை கட்டி...மல்லிகைப்பூ தலையில் வச்சு ... என, ஜானகிக்காக உருகி உருகி எழுதிப் பாடிய பாடல்கள் தான்...பாலாவின் திரையுலக பிரவேசத்திற்கு, காரணமாக அமைந்தன. அது ஒரு பிரமிப்பான, அனுபவம் என்று தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் பாலா.


நான் 8ம் வகுப்பு படிக்கும் போது, கோயில் திருவிழாவில் ஒரு பாட்டி முளைப்பாரி, தெம்மாங்கு பாடல் பாடுவார். இரண்டாண்டுகளாக அந்த பாட்டியுடன் கூட சேர்ந்து கேலி செய்து பாடிக் காட்டினேன். மூன்றாம் முறை சென்ற போது, அந்த பாட்டி இறந்து விட்டார். அப்போது கோயிலில் முளைப்பாரி பாட்டை, அடுத்து யார் பாடுவது என்ற கேள்வியெழுந்தது. அத்தை என்னை காட்டினார்.அப்படித் ஆரம்பித்தது என் பாட்டுப் பயணம்.


கல்லுாரிக்குள் காலடி எடுத்து வைத்த போது எனது உயிரை (ஜானகி) கண்டேன். அவளின் முகம், கண், தலைமுடி, நிறத்தை வைத்தே... இட்டுக்கட்டி பாட்டெழுதினேன். என் காதலை ஆரம்பத்தில் மறுத்தவள், தொடர்ந்து எனது பாடல்களிலும், குரலிலும் மயங்கினாள். இனிதாய்


இல்லறம் புகுந்தோம்.அதற்கு சாட்சியாக இரண்டு வயதில் ஆணும், பெண்ணுமாக இரட்டை குழந்தைகள்.


பறையாட்ட கலைஞர் வேலு, ஒருநாள் என்னை போனில் கூப்பிட்டார். அவர் தான் எனது ஆசான். 'நல்லா பாட்டெழுதி, அப்படியே பாடுற கலைஞர் இருந்தா இயக்குனர் சீனு ராமுசாமிக்கு அனுப்பிவிடு' என்றார். 13 கலைஞர்களை அனுப்பினேன். அவருக்கு திருப்தியாகவில்லை.


இந்நிலையில் என்னையே போய் பார்க்கச் சொன்னார். சீனு ராமசாமியை பார்க்க சென்றேன். 'வயதானவரின் துக்கநிகழ்வு, அதில் சந்தோஷமாகவும் பாடவேண்டும்; அதற்கேற்ப


பாட்டெழுது' என்றார்.


அவருக்கு கால் மணி நேரத்தில் பாட்டெழுதி கொடுத்தேன். பாடச் சொன்னபோது, மக்க(ள்) கலங்குதப்பா... என்று சோகமாக பாடினேன்.இதையே சந்தோஷமாகவும் பாடு என்றார். பாடினேன். அதன்பின், பாட அழைத்தனர். எனதுபாடலுக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.


ஏத்தகோவிலுக்குசென்றேன். அங்கு துக்க நிகழ்வுக்கான விஷயங்கள் நடந்து கொண்டிருந்தன. மைக் கட்டப்பட்டிருந்த பந்தலில் நின்று என்னை பாடச் சொன்னார்கள். சுற்றிலும் கேமரா ஒளிவெள்ளத்தில் என்ன நடக்கிறது என்பது கூட தெரியவில்லை. பின் பாட்டை மனப்பாடம் செய்து, பாடி முடித்தேன். பட்டிதொட்டியெல்லாம் எனது பாடலை இளசுகள் விரும்பி கேட்டபோது, பெரிய உயரத்தை தொட்ட மாதிரி இருந்தது,என்றார்.


இவரிடம் பேச 7639 779430.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in