டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நான் நிரந்தரமானவன்
அழிவதில்லை...
எந்த நிலையிலும் எனக்கு
மரணமில்லை...
தான் இறக்கும் சில மாதங்களுக்கு முன் தனக்கு தானே இரங்கட்பா எழுதிய கவிஞர் கண்ணதாசனின் வரிகள் இவை. காலத்தால் அழியாத கிளாசிக் பாடல்களின் கிங் மேக்கர்.
கவியரசர் என்றதும் குழந்தை கூட கூறிவிடும் பெயர் தான் கண்ணதாசன். 1924 ஜூன் 24ல் சிறுகூடல்பட்டியில் பிறந்து பட்டி தொட்டியெல்லாம் தன் பாடல் வரிகளை பாய்ச்சிய அந்த காவிய நாயகனுக்கு இறைவன் அளித்த வாழ்நாள் 54 ஆண்டுகள் மட்டுமே.
படித்தது எட்டாம் வகுப்புதான். எட்டு வருட படிப்பிலேயே தமிழ் இவர் ரத்தத்தில் கலந்தது. புலவர் அப்பாதுரையிடம், இலக்கணமும், இலக்கியமும் கற்றார். திருமகள், சண்டமாருதம், திரையலி, தென்றல் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தார். கிரகலட்சுமி பத்திரிக்கையில் எழுதிய நிலவொளியில்தான் இவர் எழுதிய முதல் கதை. 8 வயதில் “கடைக்கு போனேன், காலணா கொடுத்தேன், கருப்பட்டி வாங்கினேன்...” என்ற கவிதை முதல் கவிதை. கன்னியின் காதலி பாடல் எழுதிய முதல் திரைப்படம்.
தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளில் 5 ஆயிரம் திரைப்பாடல்கள், 4 ஆயிரம் கவிதைகள். நூற்றுக்கணக்கான புத்தகங்கள் இவர் சாதனை. யேசு காவியமும், அர்த்தமுள்ள இந்து மதமும், வனவாசமும், பாண்டமாதேவியும் தமிழ் உள்ளவரை வாழும் நூல்கள், சேரமான் காதலிக்காக சாகித்ய அகாடமி வாங்கினார். திரைப்பாடலுக்காக பல முறை தேசிய விருது வென்றார்.
சில படங்களில் நடித்தார். சில படங்கள் தயாரித்தார், “ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோலமயில் என் துணையிருப்பு” என்று உண்மை பேசினார். “என்னை பின்பற்றாதீர்கள், என் எழுத்துக்களை பின்பற்றுங்கள்” என்றார். “படைப்பதினால் நானும் இறைவன். எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” என்று தத்துவம் பேசினார்.
மாட்டு வண்டி போகாத ஊரிலும் உன் பாட்டு வண்டி போகுதடா... என பாராட்டும் அளவிற்கு சினிமா பாடல்களை தன் எழுத்து ஏணியில் ஏற்றி ஊர் முழுதும் உலா வந்த அந்த காவிய புத்தகம் இறந்த தினம் இன்று. வருடங்கள் கடந்தாலும் நினைவிலும், செவியிலும் நிச்சயம் வாழ்ந்து கொண்டிருக்கும்.
வாசகர்களாகிய நீங்களும், கண்ணதாசனின் நினைவலைகள் பற்றியும், அவரின் சிறந்த பாடல்களை பற்றியும் இங்கு பதிவு செய்யலாம்....!
கண்ணதாசனின் பிரபல பாடல்கள்...
01. பூ முடிப்பாள்....
02. அத்திக்காய் காய் காய்...
03. பார்த்தேன் ரசித்தேன்...
04. அச்சம் என்பது மடமையடா...
05. உலகம் பிறந்தது எனக்காக....
06. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்...
07. மனிதன் என்பவன்...
08. தெய்வம் தந்த வீடு....
09. அகர முதல எழுத்தெல்லாம்...
10. அதோ அந்த பறவை...
11. எங்கே நிம்மதி...
12. பொன்னொன்று கண்டேன்....
13. காலமிது காலமிது...
14. நினைக்க தெரிந்த மனமே...
15. பாவாடை தாவணியில்...
16. நான் பேச நினைப்பதெல்லாம்...
17. சட்டி சுட்டதாடா...
18. கல்லெல்லாம் மாணிக்கம்...
19. உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்...
20. சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து...
21. அன்பு நடமாடும் கலைக்கூடமே...
22. என்ன பார்வை... இந்த பார்வை...
23. அழகே வா...
24. அத்தை மகனே போய்...
25. வீடு வரை உறவு....
26. உன் கண்ணில் நீர்...
27. ஒளிமயமான எதிர்காலம்...
28. இதயவீணை தூங்கும்போது...
29. மலர்ந்து மலராது...
30. கண்ணிலே அன்பிருந்தால்...
31. கேள்வியின் நாயகனே...
32. எழு அவரங்களே...
33. மனைவி அமைவதெல்லாம்...
34. உள்ளத்தில் கலங்காது...
35. என்னுயிர் தோழி...
36. கண்கள் எங்கே...
37. கண்ணுக்கு குலமேது...
38. வாழ நினைத்தால் வாழலாம்...
39. எங்கிருந்தாலும் வாழ்க...
40. முத்தான முத்தல்லவோ...
41. சொன்னது நீ தானா...
42. கண்ணன் வந்தான்....
43. ஓராயிரம் பார்வையிலே....
44. அன்றொரு நாள் இதே நிலவில்...
45. கம்பன் ஏமாந்தான்...
46. இலக்கணம் மாறுதோ...
47. அம்மம்மா காற்று வந்து...
48. நிலவே என்னிடம் நெருங்காதே...
49. நிலவுக்கு என் மேல...
50. ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு...
51. பசுமை நிறைந்த
52. எல்லாரும் எல்லாமும்...
53. ஆடவரலாம்...
54. பரமசிவன் கழுத்திலிருந்து...
55. நான் கவிஞனுமில்லை...
56. பேசுவது கிளியா...
57. காதல் சிறகை...
58. பொன்மேனி தழுவாமல்...
59. ஆறு மனமே.,...
60. காலமகன் கண் திறப்பாளா...
61. கல்யாண நாள்...
62. இரவினில் ஆட்டம்...
63. ஆட்டுவித்தால்...
64. நாளாம் நாளாம்...
65. பூ மலையில் ஓர்....
66. கேட்டதும் கொடுப்பவனே...
67. அமைதியான நதியினிலே...
68. அத்தான் என்னத்தான்...
69. எல்லோரும் கொண்டாடுவோம்...
70. தாழையாம் பூ முடிச்சு...
71. சிப்பி இருக்குது....
72. ராஜா ராணியிடம்...
73. அந்த சிவகாமி மகனிடம்...
74. செல்லக்கிளிகளாம்...
75. முத்துக்களோ கண்கள்...
76. பாட்டொன்று கேட்டேன்...
77. ஒருநாள் போதுமா...
78. பார்த்தா பசுமரம்...
79. கல்வியா, செல்வமா, வீரமா...
80. கட்டித் தங்கம் வெட்டி...
81. மலர்கள் நனைந்தன...
82. என்னதான் ரகசியம்...
83. உன்னைக்காணாத கண்ணல்ல...
84. ஆயிரத்திதல் ஒருத்தி...
85. மன்னவன் வந்தானடி...
86. நிலவை பார்த்து வானம்...
87. பூவரையும் பூங்கொடியே...
88. அதிசய ராகம்....
89. தர்மம் தலைகாக்கும்....
90. கொடி அசைந்ததும்...
91. தூங்காத கண்ணின்று...
92. சின்னச்சிறிய வண்ணப்பறவை...
93. ஆயிரம் பெண்மை...
94. உன்னைத்தான் நானறிவேன்...
95. நல்லவர்க்கெல்லாம்...
96. ஆயிரம் மலர்கள்...
97. ஆட்டுக்குட்டி முட்டையிட்டு...
98. மான் அல்லவோ கண்கள்...
99. ஆயிரம் கரங்கள் நீட்டி....
100. கண்ணே கலைமானே....