விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் சத்யம் தியேட்டரின் கிளைகள் இனி நாடு முழுவதும் திறக்கப்பட உள்ளது. எஸ்பிஐ சினிமாஸ் என்றும் அழைக்கப்படும் சத்யம் தியேட்டர், தனது மல்டிபிளக்ஸ்களை நாடு முழுவதும் பிரபலப்படுத்த திட்டமிட்டுள்ளது. விரைவில் மும்பை, கேரளா, தெலுங்கானா, பெங்களூரு மற்றும் புதுச்சேரியிலும் தனது கிளையை துவக்க உள்ளது.
தற்போது சென்னையில் 5 இடங்களில் சத்யம் தியேட்டருக்கு சொந்தமான 36 திரைகளில் படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. இங்கு ஒரே நேரத்தில் 8342 பேர் அமர்ந்து படம் பார்க்கும் வசதி கொண்டது. கோவையில் தி சினிமா என்ற பெயரில் இயங்கி வரும் சத்யம் தியேட்டரின் கிளையில் 1561 இருக்கைகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது மும்பையின் பந்த்ரா பகுதியில் குளோபல் சினிமாவுக்கு சொந்தமான கட்டிடத்தை 9 ஆண்டுகளுக்கு சத்யம் சினிமா குத்தகைக்கு எடுத்துள்ளது. லி-ரிவி என்ற பெயரில் ஒற்றை திரையில் துவக்கப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை சமயத்தில் இந்த தியேட்டர் துவக்கப்பட உள்ளது.
திருவனந்தபுரத்தில் எஸ்பிஐ சினிமாஸ் என்ற பெயரில் நவம்பர் முதல் வாரத்தில் துவக்கப்பட உள்ளது. தற்போது கிரிபா தியேட்டர் என்ற பெயரில் இயங்கி வரும் இந்த தியேட்டரை புனரமைப்பு இரண்டு திரைகள் கொண்டதாக மாற்றப்பட உள்ளது. புதுச்சேரியில் 5 திரைகளைக் கொண்ட மல்டிபிளக்ஸ் ஆக கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25 அன்று துவங்கப்பட உள்ளது. இதே போன்று ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ.500 கோடி முதலீட்டில் ஐமேக்ஸ் மற்றும் மல்டிபிளக்ஸ்கள் துவங்கவும் எஸ்பிஐ சினிமாஸ் திட்டமிட்டுள்ளது. பெங்களூருவில் 5 திரைகளைக் கொண்ட மல்டிபிளக்ஸ் துவக்குவதற்கான பணிகள் ஏற்கனவே துவங்கி நடந்து வருகிறது. இந்த தியேட்டர் அடுத்த ஆண்டு முதல் செயல்பட துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.