ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பார்த்திபன் கனவு, சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம், சதுரங்கம், ஜன்னல் ஓரம் ஆகிய படங்களை இயக்கியவர் கரு.பழனியப்பன். அதோடு மந்திர புன்னகை படத்தில் நாயகனாக நடித்தவர் இப்போது கள்ளன் படத்தில் நடித்து வருகிறார். மேலும், கோலிவுட்டில் உள்ள இசையமைப்பாளர்களில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை கரு.பழனியப்பனுக்கு ரொம்பவே பிடிக்குமாம். அவரது பாடல்கள் மீது ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாக அவர் மீது தனக்கு தீராத காதல் இருப்பதாக சொல்கிறார்.
இதுபற்றி கரு.பழனியப்பன் மேலும் கூறுகையில், நான் இயக்குனராவ தற்கு முன்பே, நான் இயக்கும் முதல் படத்தில் யுவனைதான் இசையமைக்க வைக்க வேண்டும் என்று முடிவெடுத்திருந்தேன். அதன்படி நான் இயக்கிய முதல் படத்திற்கு அவரைதான் புக் பண்ணினேன். ஆனால் அந்த படம் வெளியாகவில்லை. அதன்பிறகு நான் இயக்கிய எந்த படத்திற்கும் அவர் இசையமைக்கவில்லை. அதற்கான சந்தர்ப்பங்களும் அமையவில்லை. அதன்காரணமாக எனக்கு யுவன் ஷங்கர் ராஜா மீது இன்னும் தீராத காதல் உள்ளது. அவர் என் படத்திற்கும் இன்னும் இசையமைக்கவில்லை என்பதினால்தானோ என்னவோ அந்த காதல் என்றைக்கும் மாறாத காதலாகி விட்டது என்கிறார் கரு.பழனியப்பன்.