இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
'தர்மதுரை', 'ஆண்டவன் கட்டனை' 'றெக்க' என வரிசையாக வெற்றிப் படங்களை கொடுத்து தர வரிசையில் மற்ற இளம் ஹீரோக்களைவிட முன்னணியில் இருக்கிறார் விஜய்சேதுபதி. அடுத்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்து வரும் விஜய்சேதுபதி அந்தப் படத்தை முடித்ததும் 'ரேனிகுண்டா' படத்தை இயக்கிய பன்னீர் செல்வம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றது. முதலில் நடிக்க சம்மதித்த கீர்த்தி சுரேஷ், பெரிய தொகையை சம்பளமாகக் கேட்டிருக்கிறார். ரெமோ படம் வெளி வந்த பிறகு, நடைபெற்ற அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் கீர்த்தி சுரேஷ் கேட்ட பெரிய தொகையை சம்பளமாக தர முடியாது என தயாரிப்பு தரப்பு கறாராக சொன்னதால், விஜய் சேதுபதி படத்தில் நடிக்க விருப்பமில்லை என்று சொல்லிவிட்டாராம் கீர்த்தி சுரேஷ்.
அவர் நடிக்கவில்லை என்றதும் உடனடியாக, 'அச்சம் என்பது மடமையடா' பட நாயகியான மஞ்சிமா மோகனை கமிட் பண்ணிவிட்டனர். கடைசி நேரத்தில் கதாநாயகி பிரச்சரனையில் இழுபறி ஏற்பட்டதால் டென்ஷன் ஆன இயக்குநர் பன்னீர் செல்வம், மஞ்சிமா மோகனை கமிட் பண்ணிய பிறகே நிம்மதியடைந்தாராம். தக்க நேரத்தில் மஞ்சிமாவை கமிட் பண்ணிக் கொடுத்த மானேஜருக்கு பி.ஆர்.ஓ. வாய்ப்பு கொடுத்து நன்றிக்கடன் செலுத்தியுள்ளார். 'அச்சம் என்பது மடமையடா' படம் முடிந்துவிட்ட நிலையில் விக்ரம் பிரபுவுடன் 'முடிசூடா மன்னன்' படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் மஞ்சிமா மோகன். இந்தப் படமும் முடிவடைந்து ரிலீஸ் தேதிக்கு காத்திருக்கிறது.