ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மிஷ்கின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‛சவரக்கத்தி'. இதில் தங்கமீன்கள் ராம் ஹீரோவாக நடிக்க அவருடன் பூர்ணா, மிஷ்கின் ஆகியோர் முக்கியமான ரோலில் நடித்துள்ளனர். மிஷ்கினின் உதவியாளர் ஆதித்யா இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அப்போது இயக்குநர் மிஷ்கின் மிகவும் உணர்ச்சிகரமாக பேசினார்.
அவர் பேசுகையில், என் 5 வயதில் நான் பார்த்த முடிவெட்டும் தொழிலாளி பிச்சை கதாபாத்திரம் படத்தின் முக்கிய கதாபாத்திரம். இதில் சுபத்ரா ரோலில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக பூர்ணா அவ்வளவு அருமையாக நடித்திருந்தார். அவருடைய படங்கள் எதுவும் ஓடாத படங்கள் தான், ஆனால் இந்த ரோலுக்கு அவருடைய முக பாவனை பொருந்தியது. ஒருவாரம் அவருக்கு பயிற்சி கொடுத்து நடிக்க வைத்தோம். உண்மையில் அவ்வளவு அருமையாக அந்த கதாபாத்திரத்தோடு ஒன்றி போய் நடித்துள்ளார். மேலும் முதன்முறையாக மலையாள நடிகை ஒருவர் சுத்த தமிழில் டப்பிங் பேசியிருக்கிறார் என்றால் அது பூர்ணா தான். பூர்ணாவை நான் புகழ்வதால், எங்கள் இருவரையும் இணைத்து எதுவும் எழுதி விடாதீர்கள், அந்தமாதிரி எல்லாம் கிடையாது, நல்ல திறமையான நடிகை.
முன்னதாக இந்தமாதிரி ஒரு ரோலில் நடிக்க பல நடிகைகளிடம் கேட்டேன், ஆனால் யாரும் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள். இந்த மாதிரி ரோலில் யார் தான் நடிக்க வருவார்கள், அவர்களுக்கு எல்லாம் வயதாகதா என்ன?, இல்லை அவர்கள் எல்லாம் 200 படங்களுக்கு மேல் நடிக்க போகிறார்களா.?
சவரக்கத்தி ஒரு நல்ல தரமான படம், கண்டிப்பாக அனைவரும் பார்க்க கூடி படமாக இருக்கும். இந்தப்படத்தின் வெற்றியை வைத்து நான் ஒன்று செய்யப்போவது கிடையாது. படம் வெற்றி பெற்றால் சொகுசு பங்களாவோ... இல்லை வேறு எதுவுமோ வாங்கப்போவது இல்லை, அடுத்தப்படியாக ஒரு படம் எடுப்பேன். சவரக்கத்தி வெற்றிப்பெற்றால் நிச்சயம் அதன் இரண்டாம் பாகத்தை எடுப்பேன்.
இவ்வாறு மிஷ்கின் பேசினார்.