இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஒரு மொழியில் வெற்றிகரமாக ஓடிய ஒரு படத்தை மற்ற மொழியில் ரீமேக் செய்வது என்பது சாதாரண விஷயமல்ல. அந்தப் படம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அது தலைவலியாகவே இருக்கும். சிறப்பாக இருந்தால் பாராட்டித் தள்ளுவார்கள், அப்படி இல்லையென்றால் உண்டு இல்லை என செய்துவிடுவார்கள். பெரும்பாலான ரீமேக் படங்கள் இப்படி ஒரு பிரச்சனையை சந்திப்பது வழக்கம். ஆனால், அதையெல்லாம் மீறி 'பிரேமம்' தெலுங்குப் படத்திற்கு வெளியீட்டிற்கு முன்பே 'ஒரிஜனல் போல் இல்லை' என பலரும் குற்றம் சாட்டினார்கள். அதிலும் மலையாளத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்துடன் தெலுங்கு சிதாரா டீச்சர் கதாபாத்திரத்தை ஒப்பிட்டு ஸ்ருதிஹாசனை உண்டு இல்லை என செய்துவிட்டார்கள். படம் வெளிவந்த பின்னும் அது தொடர்ந்ததுதான் உச்சகட்ட சோகம்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் அது பற்றி தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் ஸ்ருதிஹாசன். “ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்னரே அது எப்படி இருக்கும் என்று ஒருவரால் எப்படி சொல்ல முடியும். அது போலவே ஒரு படம் வெளிவருவதற்கு முன்பே அது எப்படி இருக்கும் என்று எப்படி தீர்மானிக்க முடியும். ஒரிஜனல் படம் பற்றி என் மனதில் எப்போதும் நினைப்பு இருக்கும். ஒப்பிட்டுப் பேசியது என்னை கீழிறக்கிவிட முடியாது,” என்று சொல்லியிருக்கிறார்.
ஸ்ருதிஹாசன் என்ன சொன்னாலும் அவருடைய நடிப்பைப் பற்றி அனைத்து விமர்சனங்களிலும் குறை சொல்லிதான் எழுதியிருக்கிறார்கள். 'மலர்' டீச்சர் கதாபாத்திரம் மிகவும் இளமையான கதாபாத்திரம். அதில் முப்பது வயது ஸ்ருதிஹாசனால் முத்திரை பதிக்க முடியவில்லை என்பதே மறுக்க முடியாத உண்மை.