தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சரவணன் மீனாட்சி தொடர் மூலம் புகழ்பெற்றவர் செந்தில். ரேடியோ ஜாக்கியாக இருந்து சின்னத்திரை நடிகர் ஆனவர். சரவணன் மீனாட்சியில் உடன் நடித்த ஸ்ரீஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தவமாய் தவமிருந்து படத்தில் சேரனின் அண்ணனாக சினிமாவில் அறிமுகமானவர். செங்காத்து பூமியிலே, பப்பாளி, வெண்ணிலா வீடு, ரொம்ப நல்லவண்டா நீ உள்பட சில படங்களில் நடித்தார். எந்த படமும் அவருக்கு உதவவில்லை.
இதனால் சினிமா வாய்ப்பு இன்றி இருந்தவர் இப்போது மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பியிருக்கிறார். அதுவும் தனது மனைவி ஸ்ரீஜாவுடன். சரவணன் மீனாட்சி ஜோடி மாப்பிள்ளை என்ற தொடரில் மீண்டும் சேர்ந்து நடிக்கிறது. இந்த தொடர் விஜய் டி.வியில் வருகிற நவம்பர் 7ந் தேதி முதல் தொடங்குகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது. தற்போது இதன் படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்து வருகிறது. செந்திலும், ஸ்ரீஜாவும் இணைந்து நடித்து வருகிறார்கள். காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவன் மனைவிக்குள் வருகிற ஈகோதான் கதை களம்.