டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இயக்குனர் பி.வாசு கன்னடத்தில் இயக்கிய படம் சிவலிங்கா. சிவராஜ்குமார், வேதிகா, வாசு மகன் ஷக்தி நடித்திருந்தனர். தற்போது இந்தப் படத்தை அதே பெயரில் தமிழில் ரீமேக் செய்கிறார் பி.வாசு. ராகவா லாரன்ஸ், இறுதிசுற்று ரித்விகா சிங் நடிக்கிறார்கள். வாசு மகன் ஷக்தியும் நடிக்கிறார். டிரைன்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் தயாரிக்கிறார்.
கன்னட சிவலிங்காவின் ஒரு போர்ஷன் படப்பிடிப்பு மைசூர் அரண்மனையில் நடந்தது. அது போன்று ரீமேக் படத்தின் படப்பிடிப்பையும் மைசூர் அரண்மனையிலேயே நடத்த வாசு திட்டமிட்டிருந்தார். இதற்கான ஏற்பாடுகளும் நடந்தது. படப்பிடிப்பு தொடங்கும் நேரத்தில் காவிரி பிரச்சினை தொடர்பான கலவரம் கர்நாடகத்தில் ஏற்பட்டதால் படப்பிடிப்பில் பிரச்சினை வரலாம் என்று கருதிய அரண்மனை நிர்வாகம் படப்பிடிப்புக்கு அனுமதி தர மறுத்து விட்டது. சுமூகமான சூழ்நிலை உருவாகும் வரை காத்திருக்க முடியாது.
இதனால் வேறு வழியில்லாமல் சென்னையில் மைசூர் அரண்மனையின் வெளித் தோற்றத்தையும், லலித் மஹாலின் உள் தோற்றத்தையும் செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள். இந்த செட்டிற்கு மட்டும் சுமார் ஒரு கோடி ரூபாய் செலவாகியிருப்பதாக கூறப்படுகிறது. மைசூர் அரண்மனையில் படப்பிடிப்பு நடத்தியிருந்தால் அதன் வாடகை இதை விட பல மடங்கு குறைவாக இருந்திருக்கும் என்கிறார்கள்.