'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்கில் மட்டுமல்லாது ஹிந்தியிலும் பிரபலமான இயக்குநர் ராம் கோபால் வர்மா. இவர் ஹிந்தியில் அமிதாப் பச்சனை வைத்து ‛சர்கார்' மற்றும் ‛சர்கார் ராஜ்' படங்கள் இரண்டும் ஹிட் படங்களாக அமைந்தன. தற்போது இப்படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்க உள்ளார் ராம் கோபால் வர்மா. ‛சர்கார் -3 -ஆக உருவாக இப்படத்தில் அமிதாப் பச்சனுடன் , யாமி கவுதம் , ஜாக்கி ஷெரப் மற்றும் சுனில் ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்கள்.
விரைவில் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், சில தினங்களுக்கு முன், அமிதாப்பச்சன் தனது 74வது பிறந்த நாளை கொண்டாடினர். தொடர்ந்து பத்திரிகையாளர்களுடனும் கலந்துரையாடினார். அப்போது தான் நடிக்கவுள்ள சர்கார்-3 படம் பற்றியும் அமிதாப் பேசினார்.
இதைப்பற்றி அமிதாப் பச்சன் கூறியதாவது... "‛சர்கார் -3' படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் துவங்க இருக்கிறது. இப்படம் ஒரு புது கதைகளத்தை கொண்டு உருவாக உள்ளது. எனது கேரக்டரான சுபாஷ் நக்ரி தவிர மற்ற கேரக்டர்கள் அனைத்தும் புதிது தான், ஆகவே புதிய நடிகர்கள் நடிக்க இருக்கிறார்கள்'' என்று கூறினார்.