‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
திருமணத்திற்கு பிறகு சினிமாவில் எதிர்பார்த்தபடி வேடங்கள் அமையாததால் சீரியல்கள் தயாரித்து நடித்து வந்த ரம்யா கிருஷ்ணன், இப்போது வம்சம் என்ற சீரியலில் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், சினிமாவிலும் அவருக்கு புதிய வாய்ப்புகள் கிடைத்திருப்பதால் சீரியலில் தனது ட்ரேக்கை குறைத்து மற்ற நடிகைகள் பக்கம் கதையை திருப்பி விட்டு, சினிமா பக்கம் கூடுதல் கவனத்தை திருப்பியிருக்கிறார் ரம்யா கிருஷ்ணன்.
அந்த வகையில், படையப்பாவிற்கு பிறகு ரஜினியுடன் 2.ஓ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் அவர், பஞ்சதந்திரம் படத்திற்கு பிறகு கமலுடன் சபாஷ் நாயுடு படத்தில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களிலுமே அவருக்கு பேசப்படும் வேடங்கள்தானாம். இதற்கிடையே பாகுபலியைத் தொடர்ந்து பாகு பலி-2விலும் நடித்து வரும் ரம்யாகிருஷ்ணனை தேடி மேலும் சில படங்கள் சென்றபோது, அந்த படங்களில் டம்மியான வேடங்கள் என்பதால் நடிக்க மறுத்து விட்டாராம். புலி பசித்தாலும் புல்லை தின்னாது என்பது போல், சில கதாபாத்திரங்களை மேற்கோள் காட்டி இந்த மாதிரி வேடங்கள் இருந்தால் சொல்லுங்கள் நடிக்கிறேன். அப்படி இல்லையேல் தேவையில்லை என்று சொல்லி விட்டாராம் ரம்யா கிருஷ்ணன்