தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
திரையுலகத்தில் பட வெளியீட்டிற்கு முன்பாக 'ரிசர்வேஷன்' என அழைக்கப்படும் முன்பதிவு என்பது ஒரு முக்கிய நிகழ்வாக பல வருடங்களாக இருந்து வருகிறது. தங்களது அபிமான நட்சத்திரங்கள் நடித்து வெளிவரும் படத்தை படம் வெளியான அன்றோ அல்லது அடுத்த சில நாட்களிலோ பார்த்துவிட வேண்டும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் முன்பதிவு செய்வார்கள். படம் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்னதாகத்தான் முன்பதிவை ஆரம்பிப்பார்கள். ஆனால், இப்போதோ அந்த முன்பதிவுக்கே ஒரு முன்பதிவு காலம் வந்துவிட்டது. படம் வெளிவருவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே முன் முன்பதிவு செய்யும் வழக்கம் வந்துவிட்டது.
'தெறி, கபாலி' ஆகிய படங்களுக்கு இப்படியான முன் முன்பதிவு அமோகமாக இருந்தது. சுமார் ஒரு வார காலத்திற்கு படம் வெளியாகும் இரண்டு மாதங்களுக்கு முன்பே முன் முன்பதிவை ரசிகர்கள் செய்தார்கள். படம் வெளிவருவதற்கு முன்பே தியேட்டர்காரர்களுக்கு அட்வான்ஸாகவே சில பல லட்சங்கள் சேர்ந்தது. அதை தற்போது அனைத்து பெரிய படங்களுக்கும் ஆரம்பித்துவிட்டார்கள்.
சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் 'எஸ் 3' படம் டிசம்பர் 16ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கான முன் முன்பதிவு சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் தற்போது ஆரம்பமாகியுள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கும் போதே அதைப் பயன்படுத்தி முன்பணமாகவே முன் முன்பதிவு செய்யப்படுவது நல்லதா கெட்டதா என்பது இனி வரும் காலங்களில்தான் தெரியும்.