தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
முன்பெல்லாம் கேரளாவிலிருந்து மலையாள நடிகைகளை மட்டுமே தமிழ் சினிமா இறக்குமதி செய்துகொண்டு இருந்தது. ஆனால் கடந்த பத்து வருடங்களாக அங்கிருந்து சில நடிகர்களையும் அழைத்து வந்து வில்லனாக்கி அழகு பார்க்கவும் ஆரம்பித்திருக்கிறது. 'கனாக்கண்டேன்' படத்தில் மலையாள நடிகர் பிருத்விராஜ் வில்லனாக அறிமுகமாகி, பின்னர் தமிழ் சினிமாவிலும் ஹீரோ ஸ்தானத்தை பிடித்து விட்டதால், தமிழிலில் வில்லனாக நடிக்கிறீர்களா என்று கேட்டதுமே உடனே சம்மதம் சொல்லிவிடுகிறார்கள் மலையாள நடிகர்கள்.
சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'ரெமோ' படத்தில் அன்சன் என்கிற மலையாள நடிகரும், மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசிலும் வில்லன்களாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளனர். இப்போது அடுத்ததாக காளீஸ் என்பவர் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் 'கீ' படம் மூலம் தமிழ்சினிமாவுக்கு இன்னொரு புதிய வில்லனாக மலையாள நடிகர் கோவிந்த் பத்மசூர்யா என்பவர் அறிமுகமாகி இருக்கிறார். மலையாளத்தில் இரண்டாம் நிலை நடிகராக வளம் வரும் இவர் தனது நடிப்புக்கு தீனிபோடும் செலக்டிவான படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.