சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் |
இயக்குநர்களில் பலரும் தயாரிப்பாளர்களாவது ஒன்றும் தமிழ் சினிமாவில் புதிதல்ல. ஆனால் அந்த கம்பெனியில் புதியவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு தருவேன் என்று சொன்னால் அது புதிதாய் தானே இருக்கும். பசங்க படத்தின் மூலம் இயக்குநராக அவதரித்து, அந்தபடத்திற்கு தேசிய விருதும் பெற்ற பாண்டிராஜ், அடுத்து அருள்நிதியை வைத்து வம்சம் என்ற படத்தை கொடுத்தார். தற்போது விஜய் டி.வி. புகழ் சிவாகார்த்திகேயன், களவாணி புகழ் ஓவியா இருவரையும் வைத்து மெரினா என்ற படத்தை இயக்கி வருகிறார். சென்னையில் உள்ள பட்டினபாக்கத்தில் தொடங்கி, காசிமேடு, ஹார்பர் என்று மெரினா கடற்கரையை மையப்படுத்தி, கடற்கரைவாழ் மக்களின் வாழ்வு மற்றும் அவர்களது உணர்வுகளை வைத்து இப்படத்தை இயக்கி வருகிறார். அதுமட்டுமன்றி படத்தில் 50 புதுமுகங்களையும் அறிமுகப்படுத்துகிறார்.
இதுதவிர பசங்க புரொடக்ஷ்ன் என்ற பெயரில் புதிதாக தயாரிப்பு கம்பெனி ஒன்றையும் தொடங்கியிருக்கும் பாண்டிராஜ், தன்னுடைய கம்பெனியில் புதுமுகங்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறியிருக்கிறார். இதற்கு என்ன காரணம் என்று கேட்டால், நானும் சினிமாவில் நுழைய பெரும் பாடுபட்டேன், என்னைப் போன்று எத்தனையோ பேர் இன்னும் வாய்ப்பு கிடைக்காமல் உள்ளனர். அவர்களது திறமையை வெளிக்கொண்டு வர எனது கம்பெனி உதவும் என்கிறார்.