ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சிவகார்த்திகேயனின் பிரச்னைக்கு உரிய தீர்வு காணப்படும், ஒரு சக நடிகனாக நானும், நடிகர் சங்கமும் அவருக்கு உறுதுணையாக இருக்கும் என்று நடிகர் விஷால் கூறியுள்ளார். பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‛ரொமோ'. சிவகார்த்திகேயன் பெண் வேடம் எல்லாம் போட்டு நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் படங்களில் அதிக பட்ஜெட்டில் வெளிவந்துள்ள படமும் இது தான். இப்படத்திற்கு மாறுப்பட்ட விமர்சனங்கள் வந்தபோதிலும் தொடர் விடுமுறையால் ரெமோ படத்தின் வசூல் சிறப்பாகவே இருந்துள்ளது.
கண்ணீர் விட்ட சிவகார்த்திகேயன்
இந்நிலையில் ரெமோ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது. அப்போது சிவகார்த்திகேயன் மிகவும் உணர்ச்சிகரமாக பேசியதோடு விழா மேடையிலேயே கண்கலங்கினார். “யார்கிட்ட இருந்தோ இந்த ஹிட்டைத் திருடிட்டு வர்ற மாதிரியே நினைக்கிறாங்க, அப்படி கிடையவே கிடையாது. ரொம்ப போராடி, போராடித்தான் இந்த இடத்துக்கு வந்திருக்கேன். நாங்க யார்கிட்டயும் எதுவுமே கேக்கலை, உதவி எதுவுமே செய்ய வேணாம். உதவியோ ஆதரவோ கொடுக்கிறதுக்கு மீடியா இருக்காங்க, மக்கள் இருக்காங்க. ஆனா, வேலை செய்யறத தயவு செஞ்சி தடுக்காதீங்க. அதை எல்லாருக்கும் நான் வேண்டுகோளா வச்சிக்கிறேன்'' என்று கண்ணீர் மல்க கூறி அமைதியாக நின்றனார்.
முதல்வர் ஜெ.,க்காக சிறப்பு பூஜை
சிவகார்த்திகேயனின் பேச்சு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே முதல்வர் ஜெயலலிதா பூரண உடல்நலம் பெற வேண்டி காஞ்சிபுரத்தில் நடந்த சிறப்பு பூஜையில் நடிகர் விஷால் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், சிவகார்த்திகேயனின் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்றார்.
சிவகார்த்திகேயன் பிரச்னைக்கு தீர்வு
இதுப்பற்றி விஷால் விரிவாக பேசியதாவது... ‛‛சிவகார்த்திகேயனுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு உரிய தீர்வு காணப்படும். சக நடிகனாக நான் அவருக்கு துணை நிற்பேன். இதுதொடர்பாக நடிகர் சங்கத்திலும் மூன்று புகார்கள் வந்துள்ளது. புகார் மீதான நடவடிக்கை போய் கொண்டு இருக்கிறது. விரைவில் அவருக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
நானும் பாதிக்கப்பட்டேன்
சினிமாவில் நிறைய துறையில் இதுபோன்ற பிரச்னைகள் இருக்கிறது. ஒருகாலத்தில், சிவகார்த்திகேயன் போன்று நானும் பிரச்னைகளை சந்தித்தேன். நடிகர் சங்கத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. நட்சத்திர கிரிக்கெட் போட்டியிலிருந்து பெற்ற தொகை, அதன்பின்னர் சங்கத்தில் மேற்கொண்ட நலத்திட்ட உதவிகள் எல்லாவற்றுக்கும் உரிய கணக்கு உள்ளது. யார் வேண்டுமானாலும், ஏன் நீங்களே கூட வந்து கணக்குகளை பார்க்கலாம்.
இவ்வாறு விஷால் கூறினார்.