ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகையர் திலகம் சாவித்ரி. தென்னிந்திய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். நடிகர் ஜெமினி கணேசனை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். சொந்தப் படம் தயாரித்து சொத்துக்களை இழந்து, கடைசி காலத்தில் வறுமையில் வாழ்ந்து இறந்து போனவர். ஒரு திரைப்படத்தின் கதையை விட அவரது சொந்த வாழ்க்கை சோகமானது.
தற்போது அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தயாராகிறது. சாவித்ரியை தமிழ்நாட்டில் நடிகையர் திலகம் என்று அழைப்பார்கள். அதேபோல அவரை தெலுங்கில் மகாநதி என்று அழைப்பார்கள். இரண்டு மொழிக்கும் பொருந்துகிற ‛மகாநதி' என்று படத்துக்கு பெயர் சூட்டி உள்ளனர். யவடே சுப்ரமண்யம் என்ற படத்தின் மூலம் புகழ்பெற்ற நாக் அஸ்வின் படத்தை இயக்குகிறார்.
இதில் நவீன நடிகையர் திலகமாக நித்யா மேனன் நடிக்கிறார். சாவித்ரி போன்ற வட்டமான முகத்தோற்றம், குறைவான உயரம், சற்று குண்டான உடம்பு இவை அனைத்தும் நித்யாமேனனுக்கு பொருந்தி வருவதால் அவர் தேர்வாகி இருக்கிறார். அதோடு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழியும் அறிந்த நடிகை என்பதால் நித்யாமேனனுக்கு இந்த அபூர்வ வாய்ப்பு கிடைத்திருக்கிறது.