குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் |
பிரியங்கா சோப்ராவின் புகழ், பாலிவுட்டை கடந்து, ஹாலிவுட் வரை எதிரொலித்தாலும், அடிக்கடி அவர், ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்குவது வழக்கமாகி விட்டது. சமீபத்தில், ஒரு சுற்றுலா பத்திரிகையின் அட்டையில், அவரது புகைப்படம் வெளியாகி இருந்தது. அதில், அவர், வெள்ளை நிற 'டிஷர்ட்' அணிந்தபடி, கவர்ச்சியாக காட்சி தந்தார்; ஆனால், அதில் எந்த பிரச்னையும் எழவில்லை. அவர் அணிந்திருந்த டிஷர்ட்டில், எழுதப்பட்டிருந்த வாசகங்கள் தான், சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது. பிழைக்க வழி தேடி, தாய்நாட்டை விட்டு, வேறு நாடுகளில் தஞ்சம் புகும், அகதிகளை அவமதிக்கும் வகையிலான வாசகங்கள், அதில் இடம் பெற்றிருந்தன. இதையடுத்து, 'டுவிட்டர்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில், பிரியங்கா சோப்ராவுக்கு எதிராக, கடுமையான விமர்சனங்கள் பதிவாகின. 'அகதிகள் வாழ்க்கை, உங்களுக்கு நகைச்சுவையாக போய்விட்டதா' என, பலரும் காட்டமாக கூறியுள்ளதால், நொந்து போயிருக்கிறார் பிரியங்கா.