பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். தற்போது சிவா இயக்கத்தில் தனது 57 வது படத்தில் நடித்து வருகிறார் அஜித். அஜித் எப்போதும் சத்தமில்லாமல் நிறைய உதவி செய்து வருபவர். இரண்டாண்டுகளுக்கு முன்னர் அஜித் தன் வீட்டில் பணிபுரியும் அனைவருக்கும் சொந்தமாக வீடு கட்டி கொடுத்தார். இப்போது தனது வீட்டில் பணிபுரிபவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி தரும் விஷயம் ஒன்றையும் செய்துள்ளார்.
அஜித், தன் வீட்டில் வேலை செய்பவர்கள் வந்து செல்ல ஏற்கனவே வாகனம் ஒன்றை அமைத்து கொடுத்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் அஜித் வீட்டிலிருந்த நேரம் பணியாளர்கள் பணிக்கு தாமதமாக வந்துள்ளனர். இதுப்பற்றி அஜித் ஏன் தாமதமாக வந்துள்ளீர்கள் என்று கேட்டுள்ளார். அப்போது அவர்கள், நேற்று இரவு முழுக்க தங்கள் பகுதிகளில் மின்சாரம் இல்லாததால் வீடுகளில் மின்சாரம் இல்லை, இதனால் சரியாக தூங்கவில்லை என்று காரணம் சொல்லியிருக்கிறார்கள். இதைக்கேட்ட அஜித் உடனடியாக தன் பணியாளர்களின் வீடுகள் அனைத்திலும் இன்வெர்ட்டர் வசதியை ஏற்படுத்தி தருமாறு, அதுவும் தரம் வாய்ந்த நல்ல இன்வெர்ட்டர்களை அமைத்து தரும்படி உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே வீடு கட்டி கொடுத்து தன் தொழிலாளர்களை நெகிழ்ச்சியை ஆழ்த்திய அஜித், இப்போது இன்வெர்ட்டரும் அமைத்து தந்திருப்பது அவர்களை மேன்மேலும் நெகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.