‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
தமிழ் இசை ஆல்பங்கள் மூலம் புகழ்பெற்றவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. நான் படத்தில் "தப்பெல்லாம் தப்பே... இல்லை" என்ற பாடலுடன் பாடகராக சினிமாவுக்கு அறிமுகமானார். அதன் பிறகு பல படங்களில் பாடிய அவரை சுந்தர்.சி ஆம்பள படத்தின் மூலம் இசை அமைப்பாளராக்கினார். அதன் பிறகு இன்று நேற்று நாளை, தனி ஒருவன், அரண்மணை 2, கதகளி படங்களுக்கு இசை அமைத்தார். தற்போதும் 5 படங்களுக்கு இசை அமைத்து வருகிறார்.இந்த நிலையில் மீசைய முருக்கு படத்தின் மூலம் ஹீரோவாகி விட்டார். படத்தை தயாரிப்பவர் சுந்தர்.சி.
ஹீரோ ஆனது பற்றி ஆதி கூறியிருப்பதாவது: என்னுடைய ஆல்பங்களில் நானே நடித்து, ஆடியிருக்கிறேன். அந்த அனுபவம்தான் ஹீரோவாக்கியிருக்கிறது. ஆனால் ஹீரோவாகணும் என்று நான் எந்த திட்டமும் வைத்திருக்கவில்லை. நானே கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கி, தயாரிக்க வேண்டும் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் சுந்தர்.சி சார் எல்லா வேலையையும் நீங்களே பார்த்துக்குங்க நான் தயாரிச்சுக்கிறேன் என்று முன்வந்தார். அவர்தானே என் சினிமா கதவை திறந்து விட்டவர். நடிப்பு கதவையும் அவரே திறக்கட்டும் என்ற சம்மதித்தேன்.
இது என்ஜினீயரிங் மாணவர்களிடையே நடக்கும் கதை. என்னுடைய அனுபவமும் நிறைய இருக்கிறது. இசைத் துறையில் நிறைய சாதிக்க துடிக்கும் ஒரு இளைஞன் சந்திக்கும் பிரச்சினைகள்தான் கதை. எனது ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரியான மியூசிக் ட்ரீட்மெண்ட் இதில் இருக்கும். என் அப்பா ஒரு தமிழ் ஆர்வலர். அதனால் எனது பாடல்களில், படங்களில் அது வெளிப்படும். பாரதியை பற்றி நிறைய படித்திருக்கிறேன். அதன் பாதிப்புதான் இந்த தலைப்பு. படம் வெளிவந்த பிறகு நிறைய பேர் மீசையை முறுக்கிக் கொண்டு திரிவார்கள். என்றார்.