பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
36 வயதினிலே படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்துள்ள ஜோதிகா, அடுத்தப்படியாக மகளிர் மட்டும் என்ற படத்தில் நடிக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ஜோதிகா. முன்னணி ஹீரோயினாக இருக்கும்போதே நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு நடிப்பிற்கு முழுக்க போட்ட ஜோதிகா, சில ஆண்டு இடைவெளிக்கு பிறகு 36 வயதினிலே படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். இப்படத்தில் ஜோதிகாவின் நடிப்பு பாராட்டப்பட்டது, அடுத்தப்படியாக ஜோதிகா குற்றம் கடிதல் இயக்குநர் பிரம்மாவின் படத்தில் நடிக்க போவதாக ஏற்கனவே செய்தி வெளியான நிலையில் இப்போது படத்தின் தலைப்போடு பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி படத்திற்கு மகளிர் மட்டும் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இது சிங்கீதம் சீனவாசராவ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் ரேவதி, ஊர்வசி, ரோகினி, நாசர் ஆகியோரது நடிப்பில் வெளிவந்த படத்தின் தலைப்பாகும். அந்த தலைப்பை பயன்படுத்த கமலிடம் முறையாக அனுமதி பெற்றுள்ளார்கள். ஏனென்றால் அந்தப்படத்தை தயாரித்தவரே கமல் தான். அதற்காக கமலுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் சூர்யா.
புதிய மகளிர் மட்டும் படத்தில் ஜோதிகாவுடன் ஊர்வசி, பானுப்ரியா, சரண்யா, நாசர், லிவிங்ஸ்டன் ஆகியோரும் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். ஜோதிகா இப்படத்தில் ஆவண பட இயக்குநராக நடிக்கிறார். முழுக்க முழுக்க குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக இயக்க உள்ளார் பிரம்மா. சூர்யாவின் 2டி நிறுவனம் மற்றும் க்ரிஸ் பிக்சர்ஸ் இணைந்து மகளிர் மட்டும் படத்தை தயாரிக்கிறார்கள்.