ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனின் 74 வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. தனது இல்லத்தில் குடும்பத்தினரும் கேக் வெட்டி கொண்டாடிய அமிதாப் பச்சன், பின்னர் ரசிகர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார். பின்னர் நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது ஒரு நிருபர் "இந்தி படங்களில் நடிக்க பாகிஸ்தான் நடிகர்களுக்கு தடை விதிக்க கோருவது பற்றி உங்கள் கருத்து என்ன?" என்று கேட்டார். இந்த கேள்வி அமிதாப்பை கோபமூட்டியது.
"இதுபோன்ற கேள்வி கேட்பதற்கு இது சரியான தருணம் இல்லை. தயவு செய்து இதுபோன்ற கேள்விகளை கேட்க வேண்டாம் என்று இருகரம் கூப்பி வணங்கி கேட்டுக் கொள்கிறேன். நமது நாட்டு எல்லையில் நடக்கும் பிரச்னையால் மக்கள் கோபத்தில் உள்ளனர். இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் அளித்து நிலமையை இன்னும் சிக்கலாக்க வேண்டுமா? நாம் பாதுகாப்பாக வாழ்வதற்கு உயிரை தியாகம் செய்யும் வீரர்களுக்காக நம் ஒற்றுமையை வெளிப்படுத்த இதுவே சரியான தருணம் என்றார். தொடர்ந்து நிருபர்கள் பாகிஸ்தான் நடிகர்களுக்கு இங்கு தடைவிதிக்கலாமா என்று கேட்டனர். "நான் அனைத்து கலைஞர்களையும் மதிப்பவன்" என்று கூறிவிட்டு எழுந்து சென்று விட்டார்.