Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரங்காராவும், ராதாவும் இருந்தால் செட்டில் சிவாஜி உஷார்! சொல்கிறார் பி.வாசு!!

20 செப், 2011 - 15:48 IST
எழுத்தின் அளவு:

மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதாவின் 32ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு செப்டம்பர் 17ம் ‌தேதி, சென்னை தென்னிந்திய திரைப்பட வர்த்தக வளாகத்தில் நடிகர் எம்.ஆர்.ராதா பற்றிய கல்லூரி மாணவர்கள் சிலர் இணைந்து இயக்கி தயாரித்திருந்த, "என் பார்வையில் நடிகவேள்" எனும் குறுந்தகடு வெளியீட்டு விழா நடைபெற்றது. முனைவர் அகிலா சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், குறுந்தகட்டின் முதல் பிரதியை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தானு வெளியிட, இயக்குநர் பி.வாசு பெற்றுக் கொண்டார்.

திரையுலக பிரபலங்கள் முக்தா சீனிவாசன், கவிஞர் பிறைசூடன், நடிகர்கள் சார்லி, வாசு விக்ரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசிய இவ்விழாவில், இயக்குநர் பி.வாசு பேசுகையில், இந்த ஜென்ரேஷன் இளைஞர்களையும், மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதா கவர்ந்திருப்பதற்கு சான்று தான் இங்கு குழுமியிருக்கும் இளைஞர்கள் கூட்டம். அவர்கள் இக்குறும்படத்தை தயாரித்து இயக்கி இருக்கும் தங்களது நண்பருக்காக வந்திருந்தாலும் சரி, எம்.ஆர்.ராதாவிற்காக வந்திருந்தாலும் சரி, நான் எல்லாம் எம்.ஆர்.ராதாவின் தீவிர ரசிகனாக, அவரது படங்களை பார்த்து வளர்ந்தவன். அந்த காலங்களில் சில படங்கள் நாயகர்களுக்காக ஓடும். சில படங்கள் பேனருக்காக ஓடும், சில படங்களோ அப்பட நாயகர்களுக்காக ஓடும். ஆனால் எம்.ஆர்.ராதா நடித்த ரத்தக்கண்ணீர் அவரது நடிப்பிற்காக மட்டுமே ஓடிய படம். அவர் தனது வாரிசுகளுக்கு விட்டுச் சென்ற மாபெரும் சொத்து ரத்தக்கண்ணீர் படம் தான் என்றால் மிகையல்ல.

நான் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் படம் இயக்க செய்கிறேன். அங்கெல்லாம் எம்.ஜி.ஆர்.,சிவாஜிக்கு ஈக்குவலாக தெரிந்த போன தலைமுறை தமிழ் நடிகர் எம்.ஆர்.ராதா அண்ணன் மட்டுமே. கன்னடத்தில் என்னை ரத்தக்கண்ணீர் படத்தின் செகண்டு பார்ட்டை இயக்கித்தரச் சொன்னார்கள். அவர்களிடம் நான் ஒரு வருடம் டைம் கேட்டிருக்கிறேன். காரணம் அவரது நடிப்பு, அதன் மீதான பயம் தான். நடிகர் திலகம் சிவாஜியே ஒருமுறை என்னிடம், டேய் நான் ஷூட்டிங்போனா அந்தப்படத்துல, ஸ்பாட்டுல ரங்காராவ், ராதா அண்ணன் இரண்டுபேரும் இருந்தா உஷாரா இருப்பேன். காரணம் கொஞ்சம் ஏமாந்தா அவங்க இரண்டு பேருமே நம்மை தூக்கி சாப்பிட்டு விடுவார்கள்... என்பார். அப்படிப்பட்ட மாபெரும் நடிகர் எம்.ஆர்.ராதா என்ற பி.வாசு, என் பார்வையில் நடிகவேள் குறும்படத்தை இயக்கி, தயாரித்த எஸ்.மதன், ஆர்.தினேஷ் இருவரையும் பாராட்டினார்.

முன்னதாக இந்நிகழ்ச்சியை தயாரிப்பாளர் ஆர்.தினேஷின் தந்தை எம்.ரமேஷ் பாபு ஒருங்கிணைப்பு செய்து வரவேற்புரையாற்றினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in