தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ரெமோ படத்தின் நன்றி விழா நிகழ்ச்சி நேற்று இரவு சென்னையில் நடைபெற்றது. பத்திரிகையாளர்கள், படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் ஆகியோருக்கு ரெமோ படக்குழுவினர் நன்றி தெரிவித்து பேசினார்.
அப்போது சிவகார்த்திகேயன் பேசுகையில்... இது ஒரு அழகான நன்றி விழா. அதற்கான காரணத்தை முதலில் நான் சொல்லி விடுகிறேன். இது படத்தோட சக்சஸ் மீட் கிடையாது. படத்தோட சக்சஸ் என்பது நீங்கள் கொடுப்பதுதான். முதலில் ஒரு படத்தின் சக்சஸ் என்பதை விநியோகஸ்தர்கள்தான் சொல்ல வேண்டும். என்ன பணம் போட்டோமோ அது ரிட்டன் வந்ததா என்பது அவர்களுக்குத்தான் தெரியும். மேலும், எனக்கு தெரிஞ்சவரைக்கும் தமிழ் சினிமாவில் நூறு சதவிகிதம் ஆடியன்ஸ்க்கு பிடித்த படம் எதுவென்று தெரியவே இல்லை.
இந்த மேடை இதுவரை யாரும் எடுக்காத காவியத்தை எடுத்திருக்கிறோம் என்பதை சொல்வதற்காக இல்லை. ஆனா என்னைக்காவது ஒருநாள் இதுவரைக்கும் யாரும் எடுக்காத ஒரு படத்தை எடுப்போம் என்ற நம்பிக்கையில ஓடிக்கிட்டிருக்கிற எங்களுக்கு நீங்க எல்லோரும் பெரிய உறுதுணையாக இருீங்க. அதுக்கு எல்லோருக்கும் நன்றி சொல்லத்தான் வந்திருக்கிறோம். இந்த படத்துக்குள் பி.சி.ஸ்ரீராம் வந்ததும் பெரிய படமாகி விட்டது. அதையடுத்து இந்த படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் வந்தபோது வெற்றிப்படமாக மாறியது. சரியான தியேட்டர்களில் படத்தை கொண்டு போய் சேர்த்தனர்.
எனக்கு பைட் என்கிறபோது மட்டும் ஒரு சின்ன பயம் இருக்கும். காரணம் டெக்னிக்ஸ் எனக்கு தெரியாது. நான் அதை படிக்கவில்லை. சரியாக பண்ண னும் இல்லேன்னா தப்பாகிடும். பைட்டில் அவங்களும் என்னை அடித்து விடக் கூடாது. நானும் அவங்களை அடிச்சிடக்கூடாது. அதனால ரெண்டு பைட்டுலயும் கவனமா நடிச்சேன். இந்த படத்தில் நான் நர்ஸ் கெட்டப்பில் இருந்ததை முதலில் கே.எஸ்.ரவிக்குமார் சார் வந்து பார்த்தார். அவர் என்ன சொல்லப்போகிறாரோ என்கிற பயம் மனதுக்குள் இருந்தது. ஆனால் அவர் பார்த்த துமே நல்லா இருக்குய்யா என்றார். அப்போதுதான் அந்த கேரக்டர் வெற்றி என்கிற நம்பிக்கை வந்தது.
இந்த படத்துல கீர்த்தி சுரேசோட பார்ட் ரொம்ப பெரியது. நிறையபேரு சொன்னாங்க கீர்த்தியைவிட நர்ஸ் கெட்டப்புல நீங்க ரொம்ப அழகா இருக்கீங்கன்னு. அதுக்கு பாதி பங்கு கீர்த்திக்கும் உண்டு. அவர்தான் என்னுடன் நடிக்கும்போது மேக்கப்பெல்லாம் சரியாக இருக்கா என்று பார்த்துக்கொண்டார். என்னுடைய க்ளோசப் வரும்போதெல்லாம் நிறைய கரெக்சன் செய்து கொடுத்தார். எங்கேயுமே வந்து நான் நல்லா இல்லேன்னு சொல்லிடக்கூடாது. அதுதான் இந்த படத்தோட ப்ளஸ் என்பதால் கீர்த்தியும் எந்தவித ஈகோவும் பார்க்காமல் நர்ஸ் கேரக்டருக்காக மெனக்கெட்டார்.
இந்த படத்தைப்பொறுத்தவரை நாங்க எல்லோருமே கற்றுக்கொண்டுதான் இருக்கிறோம். மேலும் நான் சினிமாவில் பார்த்த எனக்கு பிடித்த விசயங்க ளைத்தான் படங்களில் சொல்லி வருகிறேன். இந்த படத்தைப்பொறுத்தவரை ஒரு ஹீரோவே லேடி கெட்டப் போடும்போது அதை யாரும் கிண்டல் செய்து விடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தேன். அதனால்தான் அந்த கேர்ள் கேரக்டரை மாஸாக பிரசண்ட் பண்ணினோம். நான் எதிர்நீச்சல், காக்கி சட்டை, ரெமோ என மாறுபட்ட கதைகளில் நடிக்கும் படங்களில் அனிருத் இருந்து வருகிறார். நான் பரிசாத்தியமான முயற்சி எடுக்கும்போது அனிருத் என்னுடன் சப்போர்ட்டாக இருந்து வருகிறார். மேலும் நான் நல்லா இருக்கேன் அழகாக இருக்கேன் என்பதை விட என்னால் நன்றாக காமெடி பண்ண முடியும் என்பதை வைத்துதான் தூக்கி வந்து கொண்டி ருக்கிறேன்.
இந்த மேடையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜாவுக்கு பெரிய நன்றி சொல்லியாக வேண்டும். ஒரே மனிதராக இருந்து அந்த படத்தை முழு வேலை களையும் செய்து முடித்தார். படத்தை சரியாக கொண்டு போய் சேர்த்தார். ரஜினிமுருகன் படம் ரிலீசான அன்று 7 மணி வரை அன்றைக்கு படம் ரிலீசாகுமா என்பது எனக்கு தெரியாது. அந்த படத்தில் அப்படியொரு வலியை உணர்ந்தேன். ஆனால் இந்த படத்தில் எனக்கு தயாரிப்பார் எந்தவொரு வலிையுயம் கொடுக்கவில்லை. நான்பாட்டுக்கு நடித்து விட்டு ஈவினிங்கில் குழந்தையுடன் போய் விளையாடினேன். ஆனால் அவரை நான் இந்த படம் தொடங்கியதில் இருந்து பேமிலியோட பார்க்கவேயில்லை. அவ்ளோ கடுமையாக உழைத்தார்.
இந்த படத்தை விற்பனை செய்ய கம்பெனி கம்பெனியாக அவர் அலைந்தார். நாங்கள் ஆடியன்சை சந்தோசப்படுத்தத்தான் படமெடுக்க வந்திருக்கிறோம். ஆனால் எங்களை வேலை செய்ய விடாமல் தடுக்கிறார்கள். கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன் எங்களை வேலை செய்ய விடுங்கள். எனக்கு உதவி செய்ய மீடியா, மக்கள் இருக்கிறார்கள். நல்ல படமா கொடுக்கிறோம். சரியில் லன்னா சொல்லுங்க எங்களை திருத்திக்கிட்டு அதை விட பெட்டராக கொடுக்கிறோம். ஆனா வேலை செய்றதை தயவு செய்து தடுக்காதீங்க. அதை மட்டும் வேண்டுகோளா வைக்கிறேன். உங்களுக்கே தெரியும். நான் மீடியாக்காரனா இருந்து இந்த இடத்துக்கு வர எவ்வளவோ போராடியிருப்பேன்னு. காசு கொடுக் கிறாங்க அதுக்கு எங்களை வேலை செய்ய விடுங்க. ஒரு படம் எடுக்கும்போது எங்களாள வீடு வீடு போய் சொல்ல முடியாது அதை பத்திரிகைள் கொண்டு போய் சேர்த்திருக்கீங்க. அதுதான் இந்த ரெமோ வெற்றி பெற்றிருக்கிறது. உங்களுக்கெல்லாம் பெரிய பெரிய நன்றி. எனக்கு சப்போர்ட் பண்ணிக்கிட்டே இருங்க. கண்டிப்பாக ஒருநாள் நீங்கள் எல்லோரும் பெருமைப்படும் படியாக ஒரு படத்தை எங்கள் டீம் கொடுப்போம்.
சிலர், என்னடா நன்றி விழா மேடையில் அழுகிறார் என்று நினைக்கலாம். தப்பான விசயத்தை பண்ணிட்டு அழுதாதான் தப்புன்னு நினைக்கிறேன். நான் உண்மையா இருக்கேன். யாருக்குமே எந்த கெடுதலும் செய்யக்கூடாதுன்னு நெனைக்கிறேன். இந்த கண்ணீரைத்தாண்டி தயாரிப்பாளர் ராஜாவுக்கு நான் என்ன கொடுக்கப்போறேன்னு தெரியல. இந்த வெற்றியை யாருக்கிட்ட இருந்தோ நான் திருடிட்டு வர மாதிரி நினைக்கிறாங்க. அப்படியெல்லாம் கிடை யாது. போராடி போராடிதான் வெற்றி அடைகிறேன்.
இந்த ஒவ்வொரு ஹிட்டுக்கும் பதட்டப்பட வேண்டியதிருக்கு. 6 மாசம் சும்மா உட்கார்ந்திருந்தேன் நான். அந்த கேப்புல ரெண்டு படம் பண்ணியிருக்கலாம். அப்படி பண்ண எனக்கு விருப்பமில்லை. ஒரே நாள்ல 20 மணி நேரமெல்லாம் நான் நடிச்சிருக்கேன். ஆனாலும் ஒருநாள்கூட நான் சோகமா இருந்ததே இல்லை. இப்படியே எல்லா படங்களும் பண்ணனம்னு நெனைக்கிறேன் என்றார் சிவகார்த்திகேயன்.