இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
கமல்ஹாசனை வைத்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய படம் அவ்வை சண்முகி. இந்த படத்தில் பெண் வேடத்தில் நடித்திருந்தார் கமல். கதைப்படி தன்னிடம் கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுள்ள மனைவி மீனாவின் மனசை மாற்றி அவரை அழைத்து வர வேண்டும் என்பதற்காக, பெண் வேடமிட்டு ஒரு மாமி போன்று மீனா வீட்டிற்கு வேலைக்காரியாக செல்வார் கமல். அப்போது மீனாவின் தந்தையான ஜெமினிகணேசன், சண்முகியான கமல் மீது ஈர்க்கப்பட்டு ஜொள் விடுவார்.
இந்த வேடத்தில் முதலில் சிவாஜிகணேசனை தான் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார்களாம். ஆனால் அப்போது அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் ஓய்வெடுத்து வந்ததால் அவருக்கு பதிலாக ஜெமினியை நடிக்க வைத்துள்ளனர். அதோடு, சிவாஜியே, இந்த வேடத்தில் ஜெமினியை நடிக்க வையுங்கள். அவர்தான் ஆண், பெண் என யாராக இருந்தாலும் காதலிப்பார் என்று ஜாலியாக சிரித்துக்கொண்டே சொன்னாராம். அதன்பிறகுதான் ஜெமினியை அந்த வேடத்தில் நடிக்க வைத்துள்ளனர்.
இந்த தகவலை கூறும் கே.எஸ்.ரவிக்குமார். அவ்வை சண்முகியில் சிவாஜி நடிக்கயிருந்தபோது சண்முகியைப்பார்த்து ஜொள் விடுவது போன்று காட்சி அமைக்கவில்லை. அவருக்கு ஏற்றார் போல் ரப் அண்ட் டப்பாகத்தான் இருந்தது. ஆனால் ஜெமினிகணேசனை நடிக்க வைக்க முடிவு செய்தபோதுதான்ட அவர் சண்முகியை ஜொள் விட்டபடி சுற்றி சுற்றி வருவது போன்று காட்சிகளை மாற்றியமைத்தோம் என்கிறார்.