ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கதாநாயகியை மையப்படுத்தும் கதைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து வரும் நயன்தாரா, மாயா, டோரா படங்களுக்குப்பிறகு மீஞ்சூர் கோபி இயக்கத்தில் உருவாகியுள்ள பெயரிடப்படாத படத்தில் கலெக்டராக நடித்து முடித்து விட்டார். இந்த படத்தில் தண்ணீர் பிரச்சினையில் சிக்கித்தவிக்கும் பொது மக்கள் பிரச்சினை தீர்த்து வைக்கும் ஒரு சிறந்த கலெக்டராக நடித்துள் ளார் நயன்தாரா.
மேலும், இந்த படத்தின கதை ஒரே நாளில் நடப்பது போல் படமாக்கப்பட்டி ருக்கிறது. முதல்வன் படத்தில் ஒருநாள் முதல்வராக நடித்த அர்ஜூன், அந்த ஒருநாளில் மக்களுக்கு எந்தமாதிரியான சேவைகளை செய்தாரோ அதேபோல் இந்த படத்தில் ஒரு மாவட்ட கலெக்டராக ஒரேநாளில் நயன்தாரா என்னென்ன மக்கள் சேவை செய்கிறார் என்பதை மையப்படுத்திதான் இந்த படத்தை கோபி இயக்கியிருக்கிறார். டோரா படத்தில் நடித்துக்கொண்டே இந்த படத்திலும் சத்தமில்லாமல் நடித்து வந்த நயன்தாரா தனக்கான போர்ஷனை முடித்துக்கொடுத்து விட்டார்.