பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஏசி திரிலோகசந்தர் இயக்கத்தில் ரவிச்சந்திரன், காஞ்சனா நடிப்பில் 1960-களில் வெளியான சஸ்பென்ஸ் திரில்லர் படம் ‛அதே கண்கள்'. இப்போது அதேபெயரில் ஒரு படம் தயாராகி வருகிறது. இதில் கலையரசன் நாயகனாகவும், நெடுஞ்சாலை ஷிவதா நாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர ஜனனி, பால சரவணன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். புதியவர் ரோகின் வெங்கடேசன் இயக்குகிறார், இசை அமைக்கிறார், ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதிவு செய்கிறார். பீட்சா, சூதுகவ்வும் உள்ளிட்ட பல சிறிய பட்ஜெட் படங்களை தயாரித்து வெற்றி கண்ட சி.வி.குமார், தன் திருக்குமரண் எண்டர்டெயின்மெண்ட் பேனரில் தயாரிக்கிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் கண்களின் பின்னணியில் கலையரசன், ஷிவதா, ஜனனி ஆகியோர் இருப்பது போன்ற அட்டகாசமான படம் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தின் கதையும், முந்தைய ‛அதே கண்கள்' படத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது. இரண்டுமே திரில்லர் கதை என்பது மட்டுமே ஒற்றுமை. அந்தக் கதையில் ஒரு மனிதன் கண் முக்கியமாக இருந்தது, இதிலும் அதுபோலத்தான். அதனால்தான் அந்த தலைப்பை பயன்படுத்துகிறோம் என்று ஏற்கனவே படக்குழு தெரிவித்திருந்தது.