தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ்சினிமா இண்டஸ்ட்ரியில் நிறைய யூனியன்கள் உள்ளன. அந்த யூனியன்களில் உறுப்பினராக உள்ளவர்களை மட்டுமே திரைப்படங்களில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும். உறுப்பினர் அல்லாதவர்களுஙககு வேலை கொடுத்தால் ஃபெப்ஸியிலிருந்து ஆட்கள் வந்து படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் பிரச்சனை செய்வார்கள். இதெல்லாம் தெரிந்தும் ஃபெப்ஸி ஆட்களை டென்ஷன் அடைய வைத்துவிட்டார் அர்ஜுன். பட்டத்து யானை படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தன்னுடைய மகள் ஐஸ்வர்யாவை கதாநாயகியாக களமிறக்கினார் அர்ஜுன். அந்தப் படம் ப்ளாப்பானது மட்டுமல்ல, ஐஸ்வர்யாவுக்கு அடுத்தடுத்து படங்கள் வரவில்லை.
எனவே தன்னுடைய 'ஸ்ரீராம் ஃபிலிம் இண்டர்நேஷனல்' என்ற பேனரிலேயே ஒரு படத்துக்கு தானே கதை எழுதி இயக்கி தயாரித்து வருகிறார் அர்ஜுன் . 'காதலின் பொன் வீதியில்' என்ற இப்படத்தில் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் கதாநாயகியாக நடிக்க, புதுமுகம் சந்தன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்தில் ஐஸ்வர்யா அர்ஜுன் ஆடும் இளமை துள்ளனான பாடலுக்கு இரட்டையர்களான பூனம் ஷா, பிரியங்கா ஷா ஆகியோர் நடனம் அமைத்துள்ளார்கள். இவர்கள் நடனக்கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினர் இல்லை என்பதால் அர்ஜுன் மீது கோபத்தில் உள்ளனர் நடன இயக்குநர் சங்க நிர்வாகிகள்.