ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பெங்களூர் நாட்கள் படத்திற்கு பிறகு கடம்பன் படத்தில் நடித்து வருகிறார் ஆர்யா. இதில் பழங்குடி இனத்தவராக நடிப்பதால் தனது உடல்கட்டை வலுவாக்கி அதிரடி நாயகனாக நடித்து வருகிறார். அந்த வகையில், செல்வராகவன் இயக்கத்தில் நடித்த இரண்டாம் உலகம் படத்திற்கு பிறகு காடுகளில் முகாமிட்டு இந்த படத்தில் நடிக்கிறார் ஆர்யா. நடுக்காட்டில் முகாமிட்டு நடித்தபோது அங்குள்ள ராட்சத அட்டைப்பூச்சிகள், கொசுக்களால் நிறைய ரத்தம் சிந்தியிருக்கிறாராம் ஆர்யா.
இந்நிலையில், இதுவரை பாசிட்டீவான வேடங்களாக நடித்து வந்த ஆர்யா, இப்போது மலையாளத்தில் மம்மூட்டியுடன் இணைந்து நடிக்கும் தி கிரேட் பாதர் என்ற படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்து வருகிறார். இது நெகடீவ் கலந்த வேடமாம். இந்த படத்தை தயாரிக்கும் நடிகர் பிருத்விராஜ்தான் முதலில் இந்த வேடத்தில் நடிப்பதாக இருந்தாராம். ஆனால் தான் கமிட்டான படங்களிலேயே பிசியாக இருப்பதால் தனது நண்பரான ஆர்யாவை கமிட் பண்ணி விட்டாராம். ஆர்யாவும் நெகடீவ் வேடம் என்பதால் வழக்கத்தில் இருந்து மாறுபட்ட பர்பாமென்ஸை கொடுத்து மலையாள சினிமாவிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விடவேண்டும் என்ற தீவிர முயற்சியில் இறங்கியிருக்கிறார்.