நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? |
போக்குவரத்து போலீசாரின் அடாவடியால் மிகவும் வேதனைப்பட்டேன் என, இயக்குனர் பாக்யராஜின் மகனும் நடிகருமான சாந்தனு கூறியுள்ளார்.இதுகுறித்து, டுவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே, நேற்று அதிகாலை, 2:20 மணியளவில், நானும், என் மனைவியும், காரில் சென்று கொண்டிருந்தோம். காரை என் டிரைவர் ஓட்டிச் சென்றார்.ரோந்துப் பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ்காரர், நடுரோட்டில் எங்கள் காரை நிறுத்தி, காரில் அமர்ந்திருந்த என்னிடம், தரக்குறைவாக பேசினார். போலீஸ்காரரின் பெயர் தெரியவில்லை; ஆனால், அவரது நடவடிக்கை, மது அருந்தியது போல இருந்தது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.