இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மங்காத்தா படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் மதுவிருந்துக்கு ஏற்பாடு செய்த நடிகர் வைபவ் மற்றும் அதில் பங்கேற்ற நடிகை சோனாவை உடனடியாக போலீசார் கைது செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த சிலதினங்களுக்கு முன்னர் மங்காத்தா படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் அப்படத்தில் நடித்த நடிகர் வைபவ், தியாகராய நகரில் உள்ள தனது வீட்டில் மது விருந்துக்கும் ஏற்பாடு செய்தார். இதில் மங்காத்தா படத்தின் இயக்குநர் வெங்கட்பிரபு, வைபவ், மகத், பாடகர் எஸ்.பி.பி.சரண், நடிகை சோனா உள்ளிட்ட 30பேர் கலந்து கொண்டனர்.
விருந்தில் எஸ்.பி.பி. சரண் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக சோனா குற்றம் சாட்டினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாண்டி பஜார் போலீசிலும் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் சோனாவுக்கு திடீர் என்று நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சட்டவிரோதமாக பார்ட்டி நடத்திய வைபவ், மற்றும் அதில் பங்கேற்ற நடிகை சோனா ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நட்சத்திர ஹோட்டல்களிலேயே இரவு 11மணிக்கு மேல் பார்ட்டி நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. வீடுகளிலும் கூட்டத்தினரை வைத்து மது விருந்து நடத்த தடை உள்ளது. அப்படி இருக்கையில் நடிகர் வைபவ் இந்த மது பார்ட்டியை ஏற்பாடு செய்திருக்கிறார். இது கண்டிக்கத்தக்க செயல், வைபவை போலீசார் கைது செய்யாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது. அதுமட்டுமின்றி நடிகை சோனா பல படங்களில் கலாசாரத்துக்கும், பண்பாட்டுக்கும் விரோத மாக அரைகுறை ஆடையில் கவர்ச்சியாக நடித்தார். இப்போது ஆண்கள் நடத்திய மது விருந்திலும் கலந்து கொண்டு இருக்கிறார். எனவே வைபவ், சோனா மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடுகளில் இதுபோன்ற மது விருந்துகள் நடத்துபவர்களை கைது செய்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று தமது அறிக்கையில் கூறியுள்ளனர்.