இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது, இதில் சங்கத்தின் பொதுக்குழுவை கூட்டுவது. புதிய கட்டிடம் கட்டுவது தொடர்பான விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால் இதுபற்றிய விபரத்தையோ, நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றியோ எதுவும் வெளியிடப்படவில்லை. செயற்குழு முடிந்த பின்னர் துணை தலைவர் பொன்வண்ணன் கூறிதாவது:
செயற்குழு கூட்டத்தில் தமிழக முதலவர் அம்மா அவர்கள் சீக்கிரம் உடல் நலம் பெற்று மீண்டும் தமிழகத்தினுடைய மக்கள் பணியில் வந்து பணியாற்ற வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டோம். பின்னர் எங்களுடைய கடந்த கால செயல்கள் அனைத்தையும் திரும்பி பார்த்தோம். நிர்வாகத்தில் உள்ள மூத்த நிர்வாகிகள் அனைவரிடமும் அவர்களுடைய கருத்தை கேட்டு கொண்டு அதன்படி எந்த விஷயத்தை உடனே முடிக்க வேண்டும், எந்த விஷயத்தை கால தாமதமாக செய்யலாம் என ஆலோசனை செய்தோம். நடிகர் சங்கம் 100 விழுக்காடு நேர்மையாக செயல்படுகிறது என்பதை முழுமையாக இக்கணம் ஆணித்தனமாக இதன் மூலம் தெரிவித்து கொள்கிறோம். என்றார் பொன்வண்ணன்.