ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பெரிய ஹீரோக்களுக்கான பட்ஜெட், குறுகிய காலத்திலேயே துணிச்சலுடன் பெண் வேடம், ஹிட்டான பாடல்கள், பி.சி.ஸ்ரீராம். அனிருத் உள்ளிட்ட வலுவான டெக்னிக்கல் கூட்டணி, அசரவைக்கும் விளம்பரங்கள் என சிவகார்த்திகேயனின் எழுச்சி தமிழ் சினிமாவை மட்டுமல்ல இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. இந்த ஆர்ப்பாட்டங்கள் எதுவும் தலைக்குள் ஏறாமல் அமைதியாக இருக்கிறார் சிவகார்த்திகேயன். அவர் அளித்த சிறப்பு பேட்டி:
ரெமோ எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறதே?
இப்பேதாதான் அதை நீங்க ஃபீல் பண்றீங்க. பாக்யராஜ் கண்ணன் கதை சொன்னபோதே நான் ஃபீல் பண்ண ஆரம்பிசிட்டேன். காதலுக்காக ஒருத்தன் எந்த எல்லைக்கும் போவான்ங்றது தான் ஒன்லைன். அந்த எல்லையில் ஒண்ணுதான் நர்ஸ் வேடம். என்னோட உழைப்பு, படத்தோட பட்ஜெட் இதெல்லாம் பெரிதாக இருந்தாலும். படம் என் ஆடியன்சுக்கு ஏற்ப சிம்பிளா இருக்கணும்னு நினைச்சேன். அப்படித்தான் படம் வந்திருக்கு. அதுல எனக்கு முழு திருப்தி.
பெண்ணாக மாறியது எப்படி?
இப்படி ஒரு கேரக்டரை இயக்குனர் சொன்னதும் எனக்கு தயக்கம் இருந்தது. இதை நம்மால் செய்ய முடியுமா, ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற தயக்கம். அதுவும் இப்போது வாட்ஸ்அப், பேஸ்புக் வேற பயமுறுத்துகிறது. கொஞ்சம் சொதப்பினாலும் கிழிச்சி தொங்க விட்டுருவாங்க. இந்த கேரக்டர் ஆண்களுக்கும் பிடிக்கணும், பெண்களையும் கவர வேண்டும் என்று முடிவு செய்தோம். மேக்-அப் கலைஞர்களை வைத்து பலவித பெண் வேடங்களை போட்டுபார்த்தோம். அதிலும் திருப்பி வரவில்லை. ஒருநாள் பெண் வேடம்போட்டு செட்டுக்குள் நடந்தேன். யாருக்குமே என்னை அடையாளம் தெரியவில்லை. சிலர் "நீ யாரும்மா"ன்னு கேட்டாங்க. நான் அனுஷ்காவின் தங்கை என்று சொன்னேன். அதை நம்பினார்கள். அதன் பிறதான் நம்பிக்கை வந்தது. விஷயத்தை வெளியில் சொன்னோம். ஒரு நாள் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் சார் "யாருய்யா இந்த பொண்ணு மூக்கு முழியுமா நல்லா இருக்கே"ன்னு சொல்லிட்டு போனார். அப்போதுதான் இந்த கேரக்டர்ல நாம ஜெயிச்சிடலாமுன்னு உறுதியா நம்ப ஆரம்பிச்சேன்.
குறுகிய காலத்தில் பெரிய வளர்ச்சி உங்களுடையது. இந்த நேரத்தில் இதுபோன்ற ரிஸ்க் அவசிம் தானா?
காமெடிதான் என் பலம் என்பது எனக்குத் தெரியும். பன்ஞ் டயலாக் பேசி பத்து பேரை பறக்க விட்டால் ஆடியன்ஸ் கலாய்பாங்கன்னு தெரியும். ரெமோ கதை ஒரு ஆக்ஷன் திரில்லராவோ மாஸ் சப்ஜெக்டாகவோ இருந்திருந்தால் நடித்திருக்க மாட்டேன். இது முழுக்க முழுக்க காமெடி படம். அதற்குள் மற்ற விஷயங்களை எவ்வளவு சேர்க்க முடியுமோ அவ்வளவு சேர்த்திருக்கிறோம். ரெமோ ரிஸ்கான படம் என்பதை ஒப்புக் கொள்கிறேன். இதுபோன்ற பரிசோதனை முயற்சிகள்தான் என்னை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்று நம்புகிறேன். எடுத்துக் கொண்ட விஷயத்தை சரியாக பண்ணிவிட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. 5 வருடத்துக்கு முன்பு நான் இப்படி ஒரு இடத்தில் இருப்பேன் என்று யாராவது சொல்லியிருந்தால் காமெடி பண்ணாதீங்க சார்னு சொல்லியிருப்பேன். அது மாதிரிதான் இதுவும்.
கமல், பிரசாந்த் போட்ட பெண் வேடத்துக்கும் உங்கள் வேடத்துக்கும் என்ன வித்தியாசம்?
இப்படி கம்பேர் பண்ண வேண்டாமே பாஸ்... அவ்வை சண்முகிக்கு பிறகு ஒரு ஹீரோ அதிக காட்சிகளில் பெண் வேடமாக நடிச்சிருக்கிறதா வச்சிக்கலாம். 40 நாள் பெண்ணா நடிச்சிருக்கேன். 60 சதவிகித சீன்களில் நர்ஸ் வேடம்தான்.
நர்ஸ் வேடத்திலிருந்து வெளியே வர முடியாமல் தவிச்சீங்களாமே?
அது உண்மைதான். முதல்ல நர்ஸ் கெட்டப்புல நடிச்சேன். அந்த மேனரிசங்கள், வெட்கம், பேச்சு அப்படியே ஒட்டிக் கொண்டது. பிறகு சாதாரண இளைஞராக நடித்த போது கூடவே அந்த வெட்கமும், பேச்சும் வந்து நிறைய டேக் போனது. சில நாட்கள் கழித்துதான் நார்மலுக்கு வந்தேன். அதற்கு முன் நிறைய ரீடேக் கொடுத்து எல்லோரையும் கஷ்டப்படுத்தினது உண்மைதான்.
உங்கள் நண்பர் ராஜாவுக்கு அடுத்தடுத்து படம் பண்றதா குற்றச்சாட்டு இருக்கே?
நான் நடிச்ச படங்கள் எல்லாமே ஹிட்டுதான். ஆனால் துட்டு சரியா வரலைங்ற விஷயம் யாருக்கும் தெரியாது. ரஜினி முருகன் பெரிய ஹிட் ஆனா எனக்கு முழு சம்பளம் வரலை. என் நண்பன் ராஜா ஆரம்பத்துலேருந்து கூடவே இருக்கார். என்னோட வெற்றிகளுக்கு பிளான்போட்டு கொடுப்பதே அவர்தான். அவர் தயாரிப்பாளராகும்போது அவர் படத்துல நான் நடிக்கிறது நியாயம்தானே. ரெமோ படத்துக்கு யாருக்கும் ஒரு பைசா பாக்கி இல்லாமல் செட்டில் பண்ணியிருக்கார். இப்படி ஒரு தயாரிப்பாளரை எப்படி விட முடியும். அதான் அவரோட அடுத்து தயாரிப்புலேயும் நடிக்கிறேன். பொன்ராம் இயக்குனர். ஹீரோயின் உள்பட எல்லாமே பெரிய லெவல்ல இருக்கும்.
ரஜினி, கமல், விஜய், அஜித் வரிசைக்கு வந்து விட்டீர்களே?
ஒரு புறம் இது சந்தோஷமாக இருந்தாலும் அவர்களோடு ஒப்பிடுவதை விரும்பவில்லை. அவர்கள் பயணம் வேறு. மிகவும் கஷ்டப்பட்டு அவர்கள் தங்களை நிரூபித்திருக்கிறார்கள். அவர்கள் உழைப்புக்கு பக்கத்தில் கூட என்னால் வர முடியாது. சென்னைக்கு வந்த புதிதில் சில ஆயிரங்களுக்குதான் காம்பயரிங் செய்தேன். இன்று கோடிக் கணக்கில் என்னை நம்பி முதலீடு செய்கிறார்கள். என் பொறுப்பு அதிகரித்திருக்கிறது. மக்கள் கொடுத்த இந்த வாய்ப்பபை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற நோக்கம் மட்டுமே இப்போது இருக்கிறது. என் படத்தின் மூலமாக தயாரிப்பாளரில் தொடங்கி தியேட்டர் கேண்டீன் பாய் வரைக்கும் லாபத்தையும் சந்தோஷத்தையும் கொடுக்கணும் அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்வேன்.