‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
சமீபத்தில் இயக்குநராக அவதரித்த நடிகை அம்பிகாவை தொடர்ந்து, நடிகை ஊர்வசியும் விரைவில் படம் ஒன்றை இயக்கபோகிறார். கே.பாக்யராஜின், முந்தானை முடிச்சு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அவதரித்து, நடிப்பில் தனக்கென ஒரு ஸ்டலை பின்பற்றி அதில் முத்திரை பதித்தவர் நடிகை ஊர்வசி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என இதுவரை 300 படங்களில் நடித்திருக்கும் ஊர்வசி, தற்போது அம்மா, அக்கா போன்ற குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தை சேர்ந்தவரான ஊர்வசி, நடிப்பில் நன்கு அனுபவம் பெற்றவர். ஏற்கனவே மலையாளத்தில் ஒரு படத்தை தயாரித்துள்ளார். இந்நிலையில், இப்போது அவருக்கும் படம் இயக்கும் ஆசை வந்திருக்கிறது. தன்னுடைய நடிப்பு அனுபவத்தை வைத்து பட இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். விரைவில் அவர் ஒரு படம் ஒன்றை இயக்கப்போவதாகவும், அநேகமாக அந்தபடம் மலையாளபடமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.