தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகை மோகினி என்று ஒருவர் இருந்தாரே ஞாபகம் இருக்கிறதா..? மிக குறைந்த வயதில் 'ஈரமான ரோஜாவே' படத்தில் கதாநாயகியாக அறிமுகமான இந்த நீலக்கண் அழகியை இன்றைய தலைமுறையினர் அறிந்திருப்பதற்கு வாய்ப்பு குறைவுதான்.. ஆனால் 'நான் பேச நினைப்பதெல்லாம்', 'புதிய மன்னர்கள்' என இயக்குனர் விக்ரமனின் படங்களை டிவியில் பார்க்கும்போது என்ன ஆனார் இந்த மோகினி என்கிற கேள்வி பலருக்கும் எழவே செய்யும். கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் மலையாளத்தில் சுரேஷ்கோபியுடன் இணைந்து நடித்த 'கலெக்டர்' படம் தான் மோகினி கடைசியாக நடித்தது..
அதற்கு முன் 1999லேயே திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டிலான மோகினி, பின்னர் கணவருடன் விவாகரத்து பெற்று பிரிந்தார்.. கடந்த 2013ல் கிறித்துவ மதத்திற்கு மாறிய மோகினி, தனது பெயரை கிறிஸ்டினா என மாற்றிக்கொண்டு தற்போது கிறிஸ்துவ மதப்பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.. தான் விரக்தியாக இருந்த சமயத்தில் ஒருநாள் பைபிளை படிக்க நேர்ந்ததாகவும், அன்றிரவே ஏசுபிரான் தனது கனவில் வந்ததாகவும் அதனால் தான் கிறித்துவ மதத்திற்கு மாறியதாகவும் தெரிவித்துள்ள மோகினியின் இயற்பெயர் மகாலட்சுமி என்பதும் சொந்த ஊர் தஞ்சாவூர் என்பதும் குறிப்பிடத்தக்கது.