தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ரெளத்திரம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களை இயக்கிய கோகுல், கார்த்தியுடன் இணைந்துள்ள படம் காஷ்மோரா. பேண்டஸி படமாக உருவாகியுள்ள இப்படத்தில் கார்த்தி வித்தியாசமான ரோலில் நடித்துள்ளார். அவருடன் நயன்தாரா, ஸ்ரீதிவ்யா என்ற இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் வேலை ஆரம்பித்து கிட்டத்தட்ட மூன்று வருடம் ஆகிவிட்டது.
கார்த்தியின் லுக்கிற்காக மட்டும் கிட்டத்தட்ட 47 டெஸ்ட் லுக் எடுத்து அதில் 3 லுக்-கை தேர்வு செய்துள்ளனர். படத்தில் மட்டும் சுமார் 97 நிமிட காட்சிகள் விஷூவல் எபெக்ட்ஸ் உள்ளது. மேலும் கார்த்தி தொடர்பான ஸ்டில்களை மட்டும் 40 நாட்களுக்கு அதிகமாக எடுத்துள்ளனர். இப்படி பல நாட்கள் கடந்து தற்போது படப்பிடிப்பு எல்லாம் முடிந்து போஸ்ட் புரொடாக்ஷ்ன்ஸ் பணிகள் நடந்து வரும் நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி பேசும்போது... ‛‛இந்தப்படம் எனக்கு ரொம்ப முக்கியமான படம். ஒரு அசிரிரீ மாதிரி தான் இந்தப்பட வாய்ப்பு வந்தது. இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை பார்த்துவிட்டு கோகுல் படத்தில் நடிக்க ஆசைப்பட்டேன், விஜய் சேதுபதியிடம் அவ்வளவு நடிப்பை வாங்கி இருப்பார். எனக்கு பேய்கதை பிடிக்கும் என்பதாலோ அந்தமாதிரி ஒரு கதையுடன் வந்தார்.
காஷ்மோரா மிகவும் ஜாலியான படம், அதேசமயம் சவால் நிறைந்த படமும் கூட. பாகுபலி மாதிரியான படங்கள் பார்க்கும் போது நமக்கு இப்படியொரு வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று மிகவும் பொறாமையாக இருக்கும். இந்தப்படம் பெரிய பட்ஜெட் தான் என்றாலும் சில குறிப்பட்ட விஷூவல் எபெக்ட்ஸ் காட்சிகளுக்கு டிராலியை கொண்டே காட்சியை அமைத்துள்ளோம். அந்தளவுக்கு விஷூவெல் எபெக்ட்ஸில் பண்ண எங்களால் முடியவில்லை, ஏனென்றால் நாங்கள் ஏழை தான். இருந்தாலும் நம்மூரிலேயே இந்த மாதிரி பண்ண முடியும் என்று எண்ணும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
அப்பாவின் படங்களை பார்த்தால் சில படங்களின் ஆர்ட் ஷெட்டுகள் அப்படியே தத்ரூபமாக இருக்கும். அப்போது பணியாற்றிய ஆர்ட் டைரக்டர்கள் எல்லாம் இப்போது கிடையாது. பல பேர் இந்த பீல்டை விட்டே போய் விட்டார்கள். படம் தயாரிப்பது என்பது சற்று சிரமமான ஒன்று தான். இந்தபடத்தில் யானை, குதிரை போன்ற விலங்குகள் எல்லாம் தேவைப்பட்டது. அதை செயற்கை முறையில் உருவாக்க அந்தக்காலத்தில் பணியாற்றிய 80-85 வயது உள்ளவர்களுக்கு தான் தெரியும். அப்படிப்பட்டவர்களை தேடி கண்டுபிடித்து இந்தப்படத்தில் அவர்களை பணியாற்ற வைத்தோம். அவர்களுடன் பணியாற்றியபோது ஷெட்டே கலகலப்பாக இருந்தது. அவர்களுடன் பணியாற்றியது பெருமையாகவும் இருந்தது. இந்தப்படம் கண்டிப்பாக மக்கள் பேசுகின்ற படமாக இருக்கும். இந்தப்படத்தில் என்னுடைய கற்பனை சிறியதாக தான் இருந்தது. ஆனால் கோகுல் அதை பிரமாண்டமாக்கிவிட்டார்.
நயன்தாரா, ஸ்ரீதிவ்யா உடன் முதன்முறையாக நடித்துள்ளேன். ரத்தினமகாதேவியாக நயன்தாரா நடித்துள்ளார். பையா படத்திலேயே நயன் உடன் பணியாற்ற வேண்டியது, ஆனால் இப்போது தான் அதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஸ்ரீதிவ்யா முதன்முறையாக காமெடியாகவும், மாடர்ன் ரோலிலும் ஒரு வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளார். காதல் இல்லாத படம் இந்தப்படம்.
சந்தோஷ நாராயணனின் இசையில் ‛‛ஆசை ஒரு புல்வெளியில்...'' விழுந்த நான் இப்போது வரை அதில் மிதந்து வருகிறேன். மெட்ராஸ் படத்தில் அவரின் இசையை சேர்த்த பின்னர் படத்தை வேறு ஒரு லெவலுக்கு கொண்டு போனவர் சந்தோஷ், அப்படியே இருங்கள் நீங்கள் மாறிவிடாதீர்கள்.
காஷ்மோரா படம் தீபாவளிக்கு வரப்போகிறது, குடும்பங்கள் எல்லோரும் கொண்டாடும் படமாக இந்தப்படம் இருக்கும்.
இவ்வாறு கார்த்தி பேசினார்.