‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
முன்பு தியேட்டர்களில் திரைப்படம் முடிந்த உடன் திரையில் தேசிய கொடி பறக்கும் காட்சி திரையிடப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்படும், ரசிகர்கள் எழுந்து நின்று மரியாதை செய்து விட்டுப் போவார்கள். ஆனால் காலப்போக்கில் மக்கள் படத்தில் சுபம் போட்ட உடன் எழுந்து வெளியே போய்விட வெறும் காலி தியேட்டரில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதனால் இந்த திட்டம் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் மும்பை ஹர்ஷா நகரைச் சேர்ந்த பட்டதாரி, ஹர்ஷ் நாகர் என்பவர் டில்லி ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் "திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பது சில இடங்களில் நடைமுறையில் உள்ளது. பல இடங்களில் நடைமுறையில் இல்லை. நாடு முழுவதும் இதனை செயல்படுத்த அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" என்று மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. வருகிற 17ந் தேதி விசாரணை நடக்கிறது.