ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
உதயன் படத்திற்கு பிறகு கார்த்தியுடன் சகுனி படத்தில் நடித்தபோது தமிழில் பெரிய நடிகையாகி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் கன்னட நடிகை பிரணிதா. ஆனால் அந்த படம் வெற்றி பெறாததால் அதன்பிறகு பிரணிதாவை யாரும் கண்டுகொள்ளவில்லை. அதனால் கன்னட, தெலுங்கு படங்களில் நடிக்க சென்று விட்டவரை மறுபடியும் மாசு என்கிற மாசிலாமணி படத்திற்காக தமிழுக்கு அழைத்து வந்தனர். சூர்யா படம் என்பதால் இந்த படத்திற்கு பிறகு தமிழில் தனது மார்க்கெட் எகிறி விடும் என்று எதிர்பார்த்தார் பிரணிதா. ஆனால் அந்த படமும் அவரை ஏமாற்றி விட்டது.
இருப்பினும் தற்போது ஜெய்யுடன் எனக்கு வாய்த்த அடிமைகள், அதர்வாவுடன் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் பிரணிதா. இந்த படங்களில் நடித்துக்கொண்டே வேறு சில படங்களில் நடிப்பதற்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார். தான் சந்திக்கும் டைரக்டர்களிடம், வெயிட்டான கதாநாயகி வேடம்தான் வேண்டும் என்று அடம் பிடிப்பதில்லை. படத்தில் பல ஹீரோயினிகள் இருந்தாலும் ஹீரோவுடன் ஒரு டூயட் பாடுவது போன்ற வேடம் இருந்தாலும் நடிக்கத் தயாராக இருக்கிறேன் என்று கூறி பட எண்ணிக்கையை அதிகப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் பிரணிதா.