அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
சென்னை-28, தமிழ்ப்படம், தில்லுமுல்லு, அட்ரா மச்சான் விசிலு என பல படங்களில் நடித்தவர் மிர்ச்சி சிவா. தற்போது வெங்கட்பிரபு இயக்கியுள்ள சென்னை-28 பார்ட்-2வில் நடித்துள்ளார். மேலும், தான் நடிக்கும் படங்களில் பெரும்பாலும் உதவி இயக்குனர் வேலைகளையும் இழுத்து போட்டு செய்து வரும் மிர்ச்சி சிவா, ஏற்கனவே ஒரு படத்திற்கு வசனமும் எழுதினார்.
இந்நிலையில், தற்போது ஒரு படத்தை இயக்க தயாராகிக்கொண்டிருக்கிறார். இந்த படத்தை டைரக்டர் வெங்கட்பிரபு தயாரிக்கிறார். மேலும், தனது படங்களில் காமெடியை பிரதானமாக கொண்டு டயலாக் பேசி நடித்து வரும் மிர்ச்சி சிவா, இந்த படத்திலும் ஓப்பனிங் முதல் என்ட் கார்டு போடும் வரை காமெடிக்கு கியாரண்டி கொடுக்கிறார். அதேசமயம், அந்த காமெடிக்குள்ளும் இன்றைய இளைஞர்களுக்கு தேவையான ஒரு மெசேஜ் வைத்துள்ளாராம். அது அவர்களை சிந்திக்க வைக்குமாம். முக்கியமாக அந்த கருத்திற்காகத்தான் இந்த படத்தை தயாரிக்கவே சம்மதம் சொன்னாராம் வெங்கட்பிரபு.