ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
சைத்தான், விருமாண்டியும் சிவனாண்டியும் ஆகிய படங்களில் நடித்து வருபவர் அருந்ததி நாயர். மலையாள நடிகையான இவர் சைத்தானில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்திருப்பதால் அடுத்து முன்னணி நடிகையாகி விடுவார் என்கிற எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது. அந்த அளவுக்கு சைத்தான் படத்தில் பல கெட்டப்புகளில் நடித்துள்ள விஜய் ஆண்டனிக்கு ஈடுகொடுத்து பர்பாமென்ஸ் செய்திருக்கிறார் அருந்ததி நாயர். அதனால் விஜய் ஆண்டனி தரப்பில் இருந்து அருந்ததி நாயரின் நடிப்பு குறித்து நற்சான்றிதழ் வாசித்து வருகிறார்கள்.
அதனால், சைத்தான் படத்திற்கு பிறகு முன்னணி நடிகர்களின் படங்கள் அருந்ததி நாயருக்கு கிடைக்கும் என்கிறார்கள். அதன்காரணமாக சைத்தானுக்காக வெயிட் பண்ணிக்கொண்டிருந்தார் அருந்ததி நாயர். ஆனால், ஒருவேளை சைத்தான் கவிழ்த்து விட்டால் என்ன செய்வது என்று வேறு சிலர் அவருக்கு அச்சத்தை ஏற்படுத்தி விட்டதால், அமைந்த படம் வெளியாவதற்கு முன்பே புதிய படங்களில் கமிட்டாகி விடுவோம் என்று சில டைரக்டர்களிடம் சான்ஸ் கேட்டார் அருந்ததி நாயர். அப்படி எடுத்த முயற்சியில் கிடைத்த படம்தான் அதர்வா நடித்து வரும் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும். இந்த படத்தில் மொத்தம் நான்கு கதாநாயகிகள்.
அதாவது ரெஜினா, பிரணிதா, ஆனந்தி, அருந்ததி நாயர் ஆகியோர்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால், படப்பிடிப்புக்கு செல்லும் கடைசி நேரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் கால்சீட் கிடைத்ததை அடுத்து அருந்ததி நாயரை அவருக்கே தெரியாமல் அப்படத்தில் இருந்து தூக்கி விட்டார்களாம். இந்த சேதி அறிந்து பெரும் அதிர்ச்சியில் இருக்கிறார் அவர். என்றாலும், சைத்தான் என்னை காப்பாற்றும். ஷோலோ ஹீரோயினி வாய்ப்புகளை தேடிவரச்செய்யும் என்று தனது நம்பிக்கையை கூறி வருகிறார் அருந்ததி நாயர்.