'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மும்பையைச் சேர்ந்த நிகிதா ஹாய் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமாகி, கையெட்டும் தூரத்து என்ற மலையாளப்படத்தில் நடித்து விட்டு குறும்பு படம் மூலம் தமிழுக்கு வந்தார். அதன் பிறகு சத்ரபதி, வெற்றிவேல் சக்திவேல், ஆகிய படங்களில் நடித்தார். சரோஜா, அலெக்ஸ் பாண்டியனில் இரண்டாவது நாயகியாக நடித்தார். நிகிதா தெலுங்கு படங்களில் பிசியாக நடித்தாலும் தமிழில் வாய்ப்புகள் குறைவாகவே இருந்தது கடைசியாக பாயும்புலி படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடினார்.
நிகிதாவுக்கும், கன்னட நடிகர் தர்ஷனுக்கு காதல் இருந்ததாக முன்பு செய்திகள் வெளியானது. இதனால் தர்ஷன் மனைவி போலீஸ் வரைக்கும் சென்றார். நிகிதாவுக்கு கன்னட திரையுலம் தடைவிதித்து பின்னர் அதனை நீக்கியது.
அதன்பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த நிகிதா மும்பையை சேர்ந்த தொழிலதிபர் சுகன்தீப்பை காதலித்தார். சுகன்தீப் இளைஞர் காங்கிரசின் முன்னாள் துணை தலைவர் மேஹிந்தர் சிங்கின் மகன். இப்போது இவரது காதலுக்கு இருகுடும்பத்தாரும் பச்சை கொடி காட்டிவிட்டதால் வருகிற 8ந் தேதி ஞாயிற்றுக்கிழமை, மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் திருமணம் நடக்கிறது.
இதுகுறித்து நிகிதா கூறியிருப்பதாவது... எனது உறவினர் ஒருவர் இல்ல திருமணத்தில் சுகன்தீப்பை சந்தித்தேன். கண்டதுமே அவர் மீது காதல் கொண்டேன். என் தாய் உடல்நலமில்லாமல் இருந்தபோது பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டார். அதனால் அவரை எங்கள் குடும்பத்திற்கும் பிடித்து விட்டது. ஒரு நாள் அவர் எனக்கு வைரமோதிரம் அணிவித்து காதலைச் சொன்னார். அதன் பிறகு இருவரும் காதலிக்க தொடங்கினோம். இப்போது திருமணம் செய்து கொள்ளப்போகிறோம். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்றார் நிகிதா.