டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மறைந்த மலையாள குணச்சித்திர நடிகர் திலகனை பற்றிய முன்னுரை எதுவும் சொல்ல தேவையில்லைதானே.. அதனால் நேரடியாகவே விஷயத்துக்கு வருவோம். 1989ஆம் வருடம் திலகனுக்கு சவாலான ஒரு வருடம்.. அந்த வருடம் மட்டும் அவர் நடித்த 11 படங்கள் வெளியாகின.. காரணம் மலையாளத்தில் எந்த முன்னணி நடிகர்களின் படங்கள் உருவானாலும் அதில் திலகனுக்கும் ஒரு இடம் இருக்கும்.. இருக்கவேண்டும் என இயக்குனர்கள் உருவாக்கினார்கள்.. அவர் நடிக்கவேண்டும் என ஹீரோக்களும் விரும்பினார்கள்... அப்படி 'வர்ணம்' படத்தில் சுரேஷ்கோபி மற்றும் ஜெயராம் ஆகியோர் காம்பினேஷனில் நடித்துக்கொண்டு இருந்தார்
இன்னொரு பக்கம் நடிகர் கமல்ஹாசன் 'சாணக்யன்' என்கிற மலையாள படத்தில் நடிக்க கேரளாவில் முகாமிட்டிருந்தார. இந்தப்படத்தில் கேரள மாநில முதல்வர் என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் திலகன் நடித்தே ஆகவேண்டும் என கமல் விரும்பியதால், அதையும் ஒப்புக்கொண்டு நடித்து வந்தார் திலகன். இந்த சமயத்தில் தான் மோகன்லாலின் திரையுலக வாழ்க்கையில் முக்கியமான படமாக கருதப்படும் 'கிரீடம்' படமும் ஆரம்பிக்கப்பட்டது.. இதில் மோகன்லாலின் தந்தை கேரக்டரில் நடிக்க திலகனை பேசி சம்மதிக்க வைத்தனர். ஆனால் படம் ஆரம்பித்த இரண்டே நாட்களில் திலகன் அந்தபடத்தில் இருந்து விலகிக்கொள்வதாக கூற மோகன்லாலுக்கும் சிபி மலயிலுக்கும் அதிர்ச்சி....
காரணம் சுரேஷ்கோபி, கமல் இருவரின் படங்களுக்கும் ஒரே நாளில் கால்ஷீட் கொடுத்து நடித்து வந்ததால் அதே தேதியில் 'கிரீடம்' படத்தின் படப்பிடிப்பிற்கு தான் வந்து கலந்துகொள்வது சிரமம் என கூறினார் திலகன். அதனால் தனக்கு பதிலாக யாரையாவது போட்டுக்கொள்ளுங்கள் என்றும் கூறினார். ஆனால் அந்த கேரக்டரில் திலகன் தான் நடிக்கவேண்டும் என இயக்குனர் சிபி மலயிலும் நாயகன் மோகன்லாலும் உறுதியாக இருந்தனர். அதனால் திலகனுக்கு இந்த சிக்கலை எளிதாக்கும் முறையை ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்தனர்.. அதனை சாமர்த்தியமாக செயல்படுத்தி படப்பிடிப்பையும் வெற்றிகரமாக நடத்தி முடித்தனர்..
அதாவது சுரேஷ்கோபி-ஜெயராம் காம்பினேஷனில் உருவான 'வர்ணம்' படத்தின் படப்பிடிப்பு காலையிலும், கமல் நடித்த சாணக்யன்' படத்தின் படப்பிடிப்பு இரவிலும் நடைபெற்று வந்தது.. இந்த இரண்டுக்கும் இடைப்பட்டு நான்கு மணி நேரம் இடைவெளி கிடைத்தது.. இந்த நேரத்தில் திலகன் வந்து நடித்துவிட்டு போகும்படி தங்களது படப்பிடிப்பு திட்டங்களை மாற்றியமைத்தனர் 'கிரீடம்' படக்குழுவினர். நினைத்தவாறே படப்பிடிப்பும் இனிதாக முடிந்தது.