'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர்கள் எல்லை தாண்டிப்போகும் நேரம் இப்போது சிவகார்த்திகேயனுக்கும் வந்துவிட்டது... ஆம்.. அவரது படத்திற்கும் அவரது நடிப்பிற்கும் கேரளாவிலும் ரசிகர்கள் உருவாகி விட்டார்கள்.. இதனால் கேரளாவிலும் சிவகார்த்திகேயன் படங்களை திரையிட பல விநியோகஸ்தர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.. அந்தவிதமாக நாளை மறுநாள் (அக்-7) வெளியாக இருக்கும் சிவகர்த்திகேயனின் 'ரெமோ' படமும் கேரளாவில் வெளியாக இருக்கிறது.. மலையாள நடிகையான கீர்த்தி சுரேஷ் இந்தப்படத்தின் கதாநாயகியாக இருப்பதும் 'ரெமொ'வுகான வரவேற்பை அதிகரித்துள்ளது..
இதனால் 'ரெமோ' படத்தை கேரளாவில் புரமோட் பண்ணுவதற்காக எர்ணாகுளம் வந்து சென்றுள்ளார் சிவகார்த்திகேயன்.. 'ரெமோ' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு சிவகார்த்திகேயனின் கேரள ரசிகர்கள் திரளாக வந்து அவரை வரவேற்க, சிவகார்த்திகேயனுக்கு ஆச்சர்யம் கலந்த சந்தோசம்.. அவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்து, கனிவாக பேசி, அவர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுத்தந்து என தனது பொறுமையான செயல்களால் அவர்களை சந்தோஷப்படுத்தினார் சிவகார்த்திகேயன்..
இந்த நிகழ்ச்சிக்காக அங்கே குழுமியிருந்த மலையாள மீடியாக்களிடம் பேசும்போது, “மலையாள நடிகர்களில் மம்முட்டி, மோகன்லால், திலீப், துல்கர் சல்மான் என அனைவரையும் பிடிக்கும் என்றாலும் மோகன்லாலிடம் இருந்து கற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கிறது.. அவரது 'த்ரிஷயம்' படத்தை 3 தடவை பார்த்தேன்.. திலீப்பின் காமெடி கலந்த நடிப்பும் எனக்கு ரொம்பவே பிடிக்கும்” என ஐஸ்மழையை பொழிந்து மலையாள ரசிகர்களை குளிர்வித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.