டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சூர்யாவுடன் நடித்த அஞ்சான் படத்திற்கு பிறகு தமிழில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தெலுங்கைப்போலவே தமிழிலும் நம்பர்-ஒன் நடிகையானார் சமந்தா. அதோடு, ஓரிரு படங்களில் கிளாமராக நடித்தபோதும் பின்னர் அழுத்தமான வேடங்களில் நடித்தவர், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக் கும் வடசென்னை படத்திலும் ஸ்லம் ஏரியா பெண்ணாக நடிக்க இருந்தார். ஆனால், நாகசைதன்யாவுடனான அவரது திருமணம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து வடசென்னையில் இருந்து விலகினார் சமந்தா.
இருப்பினும், தெலுங்கில் சில படங்களில் நடிக்க அட்வான்ஸ் வாங்கியிருந்தாராம் சமந்தா. ஆனால் இந்த விசயத்தை கேள்விப்பட்ட நாகார்ஜூனாவின் மனைவி அமலா, ஒருநாள் சமந்தா நடித்துக்கொண்டிருந்த படப்பிடிப்பு தளத்துக்கு நேரில் சென்றவர், புதிய படங்களில் நடிக்க வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொண்டாராம். அதற்கு மறுப்பேதும் சொல்ல முடியாத சமந்தா, ஓகே சொன்னவர், அடுத்த சில தினங்களிலேயே தான் சில கம்பெனிகளிடம் வாங்கியிருந்த அட்வான்ஸை திருப்பிக்கொடுத்து அந்த படங்களில் இருந்து விலகிக்கொண்டாராம்.
ஆக, திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன் என்று ஆரம்பத்தில் கூறி வந்த சமந்தா, இப்போது நாகார்ஜூனாவின் குடும்பத்தினர் தொடர்ந்து நடிக்க வேண்டாம் என்று நெருக்கடி கொடுத்து வருவதால், சினிமாவை விட்டு முழுவதுமாக வெளியேறிக்கொண்டிருக்கிறார்.