டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மோகன்லாலுடன் இணைந்து தற்போது மலையாளத்தில் 'புலிமுருகன்' படத்தில் ஆதிவாசிப்பெண்ணாக மோகன்லாலின் மனைவியாக நடித்துள்ளார் கமாலினி முகர்ஜி. இந்தப்படத்தில் தனக்கும் ஆக்சன் காட்சிகள் உள்ளதாகவும் அதை படத்தின் இயக்குனரான வைசாக் தானே வடிவமைத்து படமாக்கியதாகவும் ஏற்கனவே சொல்லியிருந்தார் காமலினி முகர்ஜி. அதில் தான் மிகவும் பயந்த, ஆனால் இயக்குனர் கொடுத்த தைரியத்தால் நடித்து முடித்த ரிஸ்க்கான ஒரு காட்சியைப்பற்றி தற்போது பகிர்ந்துகொண்டுள்ளார்.. ஒரு காட்சியில் உயரமான மலைச்சரிவில் மேலேறி அங்கிருந்து 50 அடி உயரத்தில் கீழே உள்ள குளத்தில் கமாலினி குதிக்கவேண்டும்.. ஆனால் கமாலினி இதில் நடிக்க தயக்கம் காட்டினாராம்.
உடனே இயக்குனர் வைசாக் தானே விடுவிடுவென மரத்தில் ஏறியவர், அங்கிருந்து குளத்தில் குதித்தாராம். இதைப்பார்த்து கமாலினிக்கும் சற்று தைரியம் வரவே, பயத்துடன் மேலே இருந்து குளத்தில் குதித்தாராம்.. படக்குழுவினர் அனைவரும் கமாலினியின் தைரியத்தை கைதட்டி பாராட்டினார்களாம். அதன்பின் மேலே ஏறி வந்தவரிடம் மானிட்டரை காட்டிய இயக்குனர் வைசாக், இதேபோல பயமில்லாமல் இன்னொருமுறை மேலே இருந்து குதித்தால் இதேபோன்ற கைதட்டல் தியேட்டரில் ரசிகர்களிடம் இருந்து கிடைக்கும் என்றாராம்.. இப்போது பயம் விலகியதால் தைரியமாக இரண்டாம் முறையும் மலைச்சரிவில் இருந்து குளத்தில் குதித்தாராம் கமாலினி முகர்ஜி.