கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
கற்றது தமிழ் படத்தில் அறிமுகமான அஞ்சலி. பின்னர் அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும் உள்பட பல படங்களில் ஹோம்லியாக நடித்தவர், சுந்தர். சி இயக்கிய கலகலப்பு படத்தில் அயிட்டம் நடிகைகள் ரேஞ்சுக்கு அதிரடி கவர்ச்சியை வெளிப்படுத்தி இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அதையடுத்து அவரது மார்க்கெட் எகிறி வந்த நேரத்தில் தனது சித்தியுடன் சண்டை போட்டுக் கொண்டு ஆந்திராவுக்கு இடம்பெயர்ந்து சென்ற அஞ்சலி, பின்னர் தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்து வந்தவர், சிங்கம்-2 படத்தில் சூர்யாவுடன் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடியபடி மீண்டும் கோலிவுட்டுக்கு வந்தார்.
ஆனால் அப்படி வந்தவர், ஜெயம்ரவி நடித்த சகலகலா வல்லவன், இறைவி போன்ற படங்களில் நடித்தவர் பின்னர், தரமணி, பேரன்பு, காண்பது பொய் என பல படங்களில் ஹோம்லியான வேடங்களில் நடிக்க கமிட்டானார். ஆனால் அந்த எதிர்பார்த்தபடி வளராமல் தாமதமாகி வருகின்றன. இந்த நிலையில், தற்போது ஜெய் நடிக்கும் பலூன் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் அஞ்சலி. இதையடுத்து, மீண்டும் கலகலப்பு படத்தில் நடித்தது போன்ற கிளாமர் ஹீரோயின் கதைகளில் நடிக்க விருப்பம் தெரிவித்து வரும் அஞ்சலி, சில மேல்தட்டு ஹீரோக்களின் படங்களில் நடிப்பதற்காக திரைக்குப்பின்னால் தீவிர முயற்சி எடுத்து வருகிறார்.